tag:blogger.com,1999:blog-231379782024-02-07T08:14:45.173-05:00அருவிஉனது கருத்துடன் நான் உடன்படவில்லை. ஆனால் அதைச் சொல்ல உனக்கிருக்கும் உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன் - வோல்டர்Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.comBlogger21125truetag:blogger.com,1999:blog-23137978.post-56661022528297391972009-03-22T01:20:00.004-04:002009-03-22T01:43:20.088-04:00புலம்பெயர் தமிழரும் புலிக்கொடியும்?கடந்த வாரம் கனடாவின், தொரொண்டோ நகரில் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.<br /><br />இலங்கை அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக, அப்பிரதேசத்தில் அகப்பட்டு தவிக்கும் மக்கள் இராணுவ ஷெல் வீச்சுகளாலும், விமானக் குண்டு வீச்சுகளாலும் நாளாந்தம் கொல்லப்பட்டும், காயப்பட்டும் வரும் இன்றைய சூழ்நிலையில், இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் தமிழ் கனேடியர்களால் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.<br /><br />கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஆங்கில ஊடகங்களுக்கும், தமிழ் ஊடகங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி இருந்த போதும், பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.<br />போர் நடைபெறும் பகுதிகளில் வாழும் தமது உறவுகளையும், உயிரைப் பறிகொடுத்த சொந்தங்களையும் நினைத்து கணிசமானவர்கள் கலந்துகொண்ட போதிலும், கனடாவில் தற்போது 'மார்ச் பிரேக்' என்னும் பாடசாலைகளின் ஒரு வாரவிடுமுறை காரணமாக மாணவர்களும் அதிகமாக கலந்துகொண்டார்கள். ஏனையோர்கள் வழமையான எந்தக்காரணமும் இல்லாமல், அல்லது எதற்காக இம்மாதிரியான ஊர்வலங்களில் கலந்து கொள்ளுகிறோம் என்ற சிந்தனை அற்றவரகளாக கலந்துகொண்டவர்களும் இதில் அடங்குவர்.<br /><br />தமீழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினைக் கொண்ட கொடிகளையும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்படத்தினையும் இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் எடுத்துச் சென்றார்கள். பொதுவாக இம்மாதிரியான ஊர்வலங்கள் தமிழர்களால் நடத்தப்படும்போது இப்படங்களையும், கொடிகளையும் எடுத்துச் செல்வது இங்கு வழக்கம்.<br /><br />ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பினை கனடாவில் தடைசெய்த பின்னர் இம்முறை அதிகாமாக பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.<br />விடுதலைப்புலிகளை கனடா அரசாங்கம் மட்டும் தடைசெய்ய வில்லை. உலகின் பல நாடுகள் இவ்வமைப்பை தடைசெய்துள்ளது என்பது யாவரும் தெரிந்த உண்மை.<br /><br />சிறுவர்களை தமது படையில் சேர்ப்பது, மனிதக் குண்டுகளைப் பயன்படுத்துவது, பொது இடங்களில் அழிவுகளை ஏற்படுத்தவது, ஏனைய தமிழ் குழுக்களை தடைசெய்தது, ஏக பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துவது, மாற்றுக் கருத்து அரசியலாளர்களை கொலை செய்வது, புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடம் பலவந்தமாக பணம் வசூலிப்பது போன்ற இன்னபல காரணங்களால் கனடா, அமெரிக்கா உட்பட ஏனைய பல ஐரோப்பிய நாடுகள் விடுதலைப் புலிகளை தடைசெய்துள்ளார்கள்.<br /><br />இது இவ்விதம் இருக்க அண்மைக்கால யுத்தத்தின்போது, யுத்தத்தின் கொடூரத்தைத் தாங்க முடியாத மக்கள், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிச் செல்லும்போது, அம்மக்களை நோக்கி புலிகள் துப்பாக்கி பிரயோரகம் செய்யதார்கள் என்றும், அதில் பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் ஐ.நா. அதிகாரி அண்மையில் தெரிவித்திருந்த கருத்தானது புலிகள் மீது மேலும் வெறுப்படையவே செய்கின்றது. இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல்களில் இருந்து மக்களை காப்பாற்ற முடியாத புலிகள், அங்கிருந்து தப்பிச் செல்லும் மக்களை சுட்டுக்கொல்லுவதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.<br /><br />இம்மாதிரியான சூழலில், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள், இலங்கை அரசாங்கத்தின் மீதான தமது எதிர்ப்பினைக் காட்டுவதற்காக ஒன்று கூடும் போது, விடுதலைப்புலிகளின் கொடிகளையும், அவர்களின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்படங்களையும் தாங்கிக்கொண்டு 'எமது தலைவர் பிரபாகரன்' என்று சத்தம் போடுவதால் சிக்கலாக இருக்கும் எமது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கவே இவைகள் வழிசமைக்கும். '<br /><span class="">- ரமேஷ் -</span>Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-23137978.post-75514931794667128222007-07-01T23:26:00.000-04:002008-11-18T15:36:20.728-05:00எடுபடாத பல குரல்களின் வெளி!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4oLXRzujbjaQwWxZlWtrESRRFWOLBj3PlR4GIZr-QY6COvopL4tvFcq2Vsv7WT7n64kCrgsG2d5ZiUwImbLyESHIhWVXpKerQyXgqaUC0Epa-y8sxiWadNhO4Z7FHJJQSeCjy/s1600-h/mangai02.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5082439657024110178" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4oLXRzujbjaQwWxZlWtrESRRFWOLBj3PlR4GIZr-QY6COvopL4tvFcq2Vsv7WT7n64kCrgsG2d5ZiUwImbLyESHIhWVXpKerQyXgqaUC0Epa-y8sxiWadNhO4Z7FHJJQSeCjy/s320/mangai02.gif" border="0" /></a><br /><div><em>அ.மங்கை என்று அழைக்கப்படும் பத்மா வெங்கட்ரமணன், சென்னை ஸ்ரெல்லா மெரீஸ் கல்லூரியின் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். கடந்த இருபது ஆண்டுகளாக நாடகத்துறையில் நாட்டத்துடன் ஈடுபட்டுவரும் இவர், பாடசாலை மாணவர்களுக்கும், சமூகசேவை நிலையங் களுக்கும் சென்று நாடகப்பட்டறைகளை நாடாத்தி வருவதோடு, பல நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தும் உள்ளார். தொரான்டோவில் இடம்பெற்ற 2வது தமிழ் இயல் மகாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் நாட்டில் அரங்கக்கலைகள் என்ற தலைப்பில் கட்டுரை படித்தார். அத்தோடு கனேடிய நாடகக் கலைஞர்களுக்காக நாடகப்பட்டறையை நாடத்தினார். இவரின் உடல் எண்ணிக்கை என்ற நாடகத்தை நாடக விரும்பிகளுக் காக நடாத்தியும் காட்டினார். அண்மையில் ஈழப் பெண்கவிஞர்களின் கவிதை களை ‘பெயல் மணக்கும் பொழுது’ என்று தொகுத்து வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அண்மையில் தொரண்டோ வந்திருந்தபோது ‘வைகறை’ க்கு வழங்கிய நேர்காணல்.</em><br /><em></em></div><br /><div><strong><em>1. உங்களின் அரங்க / வீதி நிகழ்வுகள் பற்றியும், இ;த் துறையை நீங்கள் தெரிவு செய்ததின் நோக்கம் பற்றியும் சுருங்கமாக சொல்லுங்கள்? </em></strong></div><br /><div>அரங்கத்தில, நாடகத்தில எல்லாம் தெரியும் என்ற முனைப்போட நிச்சயமா நான் வரல்ல. முதல்ல நான் வந்தது குறிப்பா பெண்கள் அமைப்பு சார்ந்த, ஒட்டடுமொத்தமா இடதுசாரி அரசியல சார்ந்த அமைப்புகளோட சேர்ந்து வேலை செய்வதற்கான ஒரு முனைப்புக் கிடைச்சது. இப்ப அதுக்குள்ள இருந்து வேலை செய்யும் போது, கூட்டம் போடுறதோ அல்லது பேசிக்கொண்டே இருப்பது அது ரொம்ப One way trafic ஆக இருந்தது எனக்கு. இன்னொன்று ஒரு சில விசயங்கள மனசில பதியிறமாதிரி சொல்லுறதிற்கு இந்த மாதிரி கலை நிகழ்ச்சிகள் ஒரு வலுவான சாதனமாக பட்டிச்சு. முதல்ல பாடல்களாகச் செய்தோம். அப்புறம் கொஞ்சம் அந்த மாதிரி. 80களில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா அளவிலேயே ஒரு அரசியல் சார்ந்த, வீதி நாடகங்கள் சார்ந்த ஒரு Activisms என்கிறது ரொம்ப நல்ல…. குறிப்பாக south Indiaவில Emergency க்கு அப்புறமே தொடங்கிச்சு. எனவே தணிக்கைகளை மீறி செயல்படுவதற்கு பெரிய வசதிவாய்ப்புகள், பிரச்சாரங்கள், விளம்பரங்கள், செலவுகள் இதெல்லாம் இல்லாமல் செய்வதற்கான ஒரு வடிவம் என்று பார்த்தா, மனித உடம், மனிதக் குரல், மனிதனுடைய உணர்வு, மனம், அதுசார்ந்த விசயங்கள் ரொம்ப வேகமாக இருந்தது. அப்ப 80களில நாங்களும் அதற்குள்ள போனம். அப்ப அரசியல் வேலைகளுக்கான ஒரு பகுதியாகத்தான் என்னுடைய அரங்க நிகழ்வுகள் தொடங்கிச்சு என்று நான் நினைக்கிறன். </div><br /><div></div><br /><div><strong><em>2. இன்றைய சூழலில் நவீன தொடர்பு சாதன ஊடகங்கள் இருக்கும் போது மேடை நாடகம், வீதி நாடகங்கள் ஊடாக எவ்வளவு தூரம் உங்கள் கருத்துக்கள் பரவலாக மக்களைச் சென்றடையும் என்ற சந்தேகம் பற்றி….? </em></strong></div><br /><div>எண்ணிக்கை அளவில வைச்சுப் பார்த்தீங்கென்னா தொலைக்காட்சி அளவிற்கு சினிமான கூடப்போகமுடியாது. அதான் நிஜம். (டி.வி.டியில பார்க்கிறது வேற) ஆனா ஒரு அனுபவம் என்று பார்க்கும் போது.. அரங்கம் கொடுக்கக் கூடிய அனுபவம் அந்த நேரடியாக அதாவது வேர்கிறது என்றால் அந்த வேர்வையை பார்க்கிற ஒரு வாய்ப்பு. பெருமூச்சு விட்டதென்றா மார்புகள் ஏறி இறங்கிறத பார்கிக்றது. அதாவது நேரடியாக தன்னை மாதிரி இரத்தமும் சதையுமான ஒரு நபர் இந்த உணர்வுகளை வெளிக்காட்டுகிறார் என்கிற அனுபவத்தை தருவது நாடகம் மட்டும் தான். Even நடனத்தில் எல்லாம் அது கொஞ்சம் stylish ஆகிறது. நாடகத்தில நம்ம ஒயிலாக்க வடிவத்தில செய்தாக்கூட அது வந்து ஒரு சக மனிதனின் நேரடியாக கண்னாலும், காதினாலும், மனதாலும் உணரக்கூடிய ஒரு அனுபவத்தைத் தருவது அரங்கம் என்று சொல்லலாம். என்னைப் பொறுத்த வரை அந்த Medium த்தை யாரும் Over come பண்ண முடியாது. அரங்கத்தை எதுவுமே Replace பண்ண முடியாது. அதனுடைய சில அம்சங்களை வேற வேற சாதனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.<br /></div><br /><div><strong><em>3. நீங்கள் சார்ந்த அல்லது நம்பும் அரசியல் ஊடாக சமூகத்தில் ஒதுக்கப்படும் / ஒடுக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? </em></strong></div><br /><div>அரசியல் சார்ந்த, அறிவு சார்ந்த, கோட்பாடு சார்ந்த புரிதல் ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு ஏழை சொல் அப்பலம் ஏறாது என்கிற மாதிரி மேடையில் எடுபடாத பல குரல்களை வெளியில கொண்டு வருவதற்கு அரங்கக்தை ஒரு பெரிய ஊடகமாக பயன்படுத்துவதில எனக்கு ரொம்ப ஆர்வம் இருக்கு. அதில பிரதானமான குழுவாக எனக்கு கண்ணில படுகிறது பெண்கள். இப்போ பெண்களின் குரல் என்பதோ அல்லது பெண்களின் இருப்பு என்பதோ இங்கே இருக்கக் கூடிய தந்தைமை ஆதிக்க சமூதாயத்தினுடைய கட்டமைப்பில தான் உருவாகிறது. அப்ப ஒரு பெண் எப்படி நடக்கணும் என்கிறதக்கூட அவங்க தீர்மானிக்கிறாங்க அதே மாதிரி நாங்கள் நடக்கிறம். நிஜமா நாங்கள அந்த மாதிரி நடகிறமா என்கிறது பெண்ணாக இருக்கிறவ யோசித்துக் கூட பார்கிறதில்லை. இப்படி இருந்தால் தான் நீ பெண்ணா அங்கீகரிக்கப்படுவாய் என்று சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் ஆணுக்கும் அதே சிக்கல்கள் இருக்கின்றது. ஆண் என்றால் இப்படித்தான் நடந்து கொள்னும். ஆண் என்றால் அழக் கூடாது. “Boys don’t cry” என்ற படம் எல்லாம் வந்ததில்ல அப்ப அந்த பாலினம் சார்ந்த புரிதலோட கூடிய ஒரு Voice நாம அரங்கத்தில பழகவேடியதாக இருக்கிறது. அதே மாதிரி இப்ப வந்து சாதி ரீதியாக ஒடுக்குமுறை இருக்கிறது. தமிழ் நாட்டு அரங்கத்தைப் பொறுத்த வரை ‘தப்பாட்டம்’ என்ற ஒரு உடைப்பைக் கொண்டு வந்திருக்கிறது என்று கூடச் சொல்லலாம். அது ஒரு சாதியம் சார்ந்த ஒரு கலையாக இருக்கு. இழிவைக் குறிக்கிறதாக இருக்கு, சாவோடு ஒட்டியிருக்கிற சடங்கு சார்ந்ததாக இருக்கிறது. ஆண்களால் மட்டுமே ஆடப்படுகிறது. இப்படியெல்லாம் பல தடங்கல்கள் இருந்தாலும் கூட அது ஒரு போர்ப்பறையாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அது என்னுடைய இசை. அந்த இசையை நாம இழக்கக் கூடாது அப்படி என்கிறமாதிரி. அப்படித்தான் அரவாணிகளுடைய சிக்கல்களையும் நான் பார்க்கிறேன். ஒரு ஆணாக இல்லாமல், பெண்ணா இல்லாமல், இரண்டாகவும் இருக்கக் கூடிய அல்லது இரண்டும் கெட்டானாக இருக்கக் கூடிய ஒரு வாழ்க்கை வாழக்கூடிய அவங்களுடைய குரல்.<br />அப்போ விழிம்பில அல்லது ஒதுக்கப்பட்டோராக, அம்பலம் ஏறாத சொற்களில இருக்கிறவங்களுக்கு மேடை வந்து ஒரு வாய்பாக அமையும் என்று நான் நினைக்கிறன். </div><br /><div></div><br /><div><strong><em>4. உங்களுடைய அரங்கக் குழுவில் ஆண் / பெண் கலைஞர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். அவர்களும் அரசியல், கருத்து ரீதியான இணைந்து கொண்டவர்களா? எப்படி? </em></strong></div><br /><div>முதல்ல அமைப்பு சார்ந்து செய்யும்போது அமைப்பில இருக்கக் கூடிய உறுப்பினர்களைக் கொண்டு தான் நாம கலைக்குழுவில உறுப்பினர்களாக எடுக்கிறம். ஒரு கொள்கை ரீதியாகவோ அல்லது தலித்துகளுக்கு சார்பானதாகவோ அரசியல் தன்மை உடையவர்கள் குழுவிற்குள்ள வர்ராங்க என்று நாம ஊகிக்கின்றோம். ஆனா உண்மையில் நீங்கள் நாடகத்தில ஒத்திகையில, நாடகம் செய்யும்போது நமக்குக் கிடைக்கிற அனுபவத்தில இருந்து தான் நமக்கு அவங்கவங்கட சுயநிறம் தெரியும். அதனால எனக்கு உண்மையில இந்த அரசியல் உனக்கு இருக்கா இல்லையா என்றெல்லாம் தராசு போட்டு பார்க்கிறதில எனக்கு நம்பிக்கையில்ல. குறிப்பா புநனெநச வந்து நான் இன்னைக்கு Feminists என்று சொல்லி இன்னைக்கு இருக்கிற மாதிரி ஐம்பது வருசத்திற்கு இருப்பன் என்று சொல்லி எதிர்பார்க்கவும் முடியாது. அந்த Concept மாறிக்கிட்டே இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சிக்கலை மையப்படுத்தி நாடகம் செய்வதென்றா அதில் பங்கெடுக்கின்ற கலைஞர்களுக்கு அந்த Issues பற்றின ஒரு Broad ஆன Agreement இருக்கனும் என்று நான் நினைக்கிறன். இப்ப ஒரு சுற்றச் சூழழுக்கு எதிரான ஒரு ஆள் ‘குறிஞ்சிப்பாட்டு’ போன்ற ஒரு நாடகத்தைச் செய்ய வந்தால் எனக்கு அதில சிக்கல் வரும். அல்லது ஒரு பெண்ணுடைய எழுத்த மட்டமாக நினைக்கிற ஆள் ‘ஒளவை’ நாடகத்தில வந்து செய்தால்… செய்யவும் முடியாது என்று நான் நினைக்கிறன். நிஜமாகவே நம்புறன் மேடையில பொய் சொல்ல முடியாது. உண்மையில மேடையில நடிக்கிறது என்கிறது வந்து நம்மள அம்மணமா காட்டுறதுதான். உன்னுடைய எல்லா உணர்வுகளையும் அப்பட்டமா வெளியில சொல்லுவதற்கான ஒரு இடமாத்தான் அது இருக்கிறது. அங்க ரொம்ப மறைச்சு பஞ்சோந்தியாக இருக்க முடியாது என்று தான் நினைக்கிறன். அதனால கண்டிப்பாக அந்த அரசியல் சார்ந்த அறிவு என்பது நான் எடுத்து கொள்கிற Textக்கும் அது சார்ந்த அரசியல் புரிதல் என்பதும் அவசியம். இப்ப அரவாணி பற்றிச் செய்யும் போது எனக்கொண்ணும் தெரியாது. அதைக் கற்றுக்கொள்ளாமல் நான் அதை செய்யக் கூடாது என்று நான் நினைக்கிறன்.</div><br /><div></div><br /><div><strong><em>5. பெண் சிசுக் கொலைக் எதிராகவும், அரவாணிகளின் உரிமைக்காவும் நீங்கள் வேலை செய்கின்றீர்கள். தமிழச் சூழலில் அரவாணிகளை எப்படிப்பார்கிறார்கள்? அல்லது நடத்துகிறார்கள்? </em></strong></div><br /><div>தமிழ்ச் சமூகத்தினுடைய வெளிப்பாட்டிற்கு உரைக்கல்லாக நாம மீடியாவையும், திரைப்படத்தையும் எடுத்துக்கிட்டமென்றால் அதவிட அதிகமான இவங்களை கேவலப்படுத்திறது வேற எதுவும் இல்லை. அதுதான் Majority வான point of view வாக இருக்கிறது. தெருவில அவங்க நடக்க முடியாது, சேர்ந்து படிக்கிறவங்களால வாற தொல்லைகள் கொஞ்சம் கூட. அதெல்லாம் உண்மையில சொல்லிமாளாது. பல நேரங்களில பாலியல் வன்முறை உட்பட எல்லா விசயங்களையும் அனுபவிக்கிறவங்களாகத் தான் அந்த அரவாணிகள் இருக்கிறாங்க. ஆனா இப்ப வந்து எயிட்ஸ் தொடர்பான விழிப்பு உணர்வு காரணமாக என்னவோ இவங்களையும் ஒரு ஜீவிகளாக அங்கிகரிக்கின்ற நிர்ப்பந்தம் வந்திருக்கு. அப்ப இவங்களுக்கு ஒரு Presents இருக்கு என்பதை இன்றைக்கு தமிழ்ழ வந்து ஒத்துக்கிட்டாங்க என்று தான் நான் நினைக்கிறன். இருந்தாலும் அதை அங்கீகரித்திட்டாங்க என்று சொல்ல முடியாது. </div><br /><div></div><br /><div><strong><em>6. அண்மைக்காலமாக பெண் மொழியின் தேவை பற்றி பரவலாக பேசப்படுகிறது. அதன் தேவை, முக்கியத்துவம் பற்றி உங்கள் கருத்து என்ன? </em></strong></div><br /><div>உண்மையில் பெண்மொழி பற்றிய விவாதம் வந்து theoretical லாக பெண்கள் தொடர்பான விசயம். அது அல்ல. இது வந்து மொழிக்குள்ள இயங்கக் கூடிய ஒரு படுமோசமான பாலியல் பாராபட்சத்திற்கு எதிராக ஆண்களும், பெண்களும் தொடுக்க வேண்டிய ஒரு யுத்தம். உண்மையிலலேய ஒரு பெரிய யுத்தம். கொச்சையாக பெண்ணைப்பார்க்கிற பார்வையில் இருந்து சுயமதிப்பு சார்ந்த சிந்தனைகள் இல்லாம ஒரு பண்டமாக பெண்ணை வர்ணிக்கிறதில இருக்கு. பெண்ணைப்பற்றிய சிந்தனையில் இருக்கு. அது ஆண், பெண் இரண்டு தரப்பிலும் இருந்து வருகுது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக பெண்கள் அனுபவம் சார்ந்தும், தங்களுடைய உயிரில் சார்ந்த அனுபவங்கள் மூலமாகவும் தன்னுடைய மொழியைப் பற்றி பிரக்ஞையோட அவங்க பயன்படுத்தினாங்கென்டா புதிசான ஒரு மொழிய, ஒரு யாப்ப நம்மளால கண்டு பிடிக்க முடியும் என்ற ஊகத்தில தான் நாம செயல்படுறம். ஆனா இதில வந்து பெண்ணாப் பிறந்தவங்கதான் செய்ய முடியும் என்பதோ அல்லது பெண்ணாப் பிறந்த எல்லாரும் செய்யமுடியும் என்கிறதோ எனக்கு ஒப்புதலே கிடையாது. ஏனென்றா அவ்வளவு தூரம் ஒரு மூளைச்சலவை செய்யப்பட்ட ஆணாதிக்க சமூகத்தில நாம எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறம். ஆதனால பெண்மொழி குறித்த உரையாடல் என்பது ரொம்ப ஆரோக்கியமாக இரண்டு தரப்பிலும் வைக்கப்பட வேண்டிய ஒன்று. புதிதான ஒரு மொழி என்பது கட்டாயம் தேவை என்று நான் நினைக்கிறன். மொழியுடைய ஆதிக்கம் சார்ந்த கட்டமைப்பை உடைச்சிட்டு வரக்கூடிய ஒரு புதிய மொழி நம்ம எல்லாருக்கும் வேண்டும் என்று நான் நினைக்கிறன். </div><br /><div></div><br /><div><strong><em>7. தமிழ் மரபும், பண்பாடும் ஆண் / பெண் சமத்துவத்திற்கு தடையாக இருக்கின்றனவா? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க? </em></strong></div><br /><div>இந்த மரபு, பண்பாடு என்பது எதை தமிழ் மரபு, பண்பாடு என்று குறிக்கிறதில இருந்து வந்திருக்கும். இப்ப வந்து தமிழ் பெண், கற்பு உண்மையிலே அதுக்கு என்ன பொருள் என்றே எனக்கு தெரியல. இப்போ தமிழ் கற்பு என்று சொன்னா தமிழுக்கென்று தனியா சாயம் puசப்பட்ட ஒரு கற்பு இருக்கா என்று எனக்குத் தெரியல. இப்ப குஷ்புவினுடைய வழக்கு வந்த போதெல்லாம் ரொம்ப கொடுமையாக ஏதோ தமிழருடைய கற்புணர்வை அவ குத்திட்டாங்க என்கிற மாதிரி பெரிய போராட்டங்கள் எல்லாம் அவங்களுடைய Statementக்கு எதிராக வந்திச்சு. அப்ப அதெல்லாம் எனக்கு ஒரு பங்கர கற்பிதமாக தெரியுது. இது பெண்ணை முடக்கி வைப்பதற்கான கற்பிதமாக இருக்கு. அனால் இதற்கு காரணம் தமிழ் மரபில்ல. மாறாக பிற்போக்கான பார்வை சார்ந்த விசயமாக தான் நான் பார்க்கிறன்.உண்மையில ஒளவையைப் படிச்சவங்க, அந்தக் காலத்திலேயே காதல் உணர்வையும், காம வேட்கையையும் ரொம்ப இயல்பாகவும், எந்தவித கூச்சநாச்சமும் இல்லாமல் பேசின குரல் ஒளவையினுடைய குரல். அல்லது ஒரு பெண்ணுக்கு வந்து கனிகை வாழ்வும் வேண்டாம், இல்வாழ்வும் வேண்டாம் துறவு வாழ்க்கையே வேண்டும் என்று சொன்ன பிம்பம் மணிமேகலை. இதெல்லாம் நமக்கு தமிழிலதான் கிடைக்கிது. அப்ப இப்படி இருக்கும்போது எந்த மரவை நீங்கள் தமிழ் மரபு என்று சொல்லுறீங்க என்ற கேள்வி எனக்கு இருக்கு. இன்னொன்று மரபோ, பண்பாடோ என்று சொலுறதெல்லாம் வந்து ஒரு பெட்டிக்குள்ள போட்டு யாரோ ஒருத்தர் தீர்மானிக்கிற ஒரு சட்டகத்திற்குள்ள அடையவே அடையாது. அது Dynamic. ஒவ்வொரு நேரமும் மாறுபடும். உண்மையிலேயே ஒரு இயங்கியல் ரீதியான புரிதல் இருக்கிறவங்க இந்தக் கட்டத்தில இருந்து இன்னொரு கட்டத்திற்கு போகனுமே தவிர பின்னாடி திருப்பி எடுக்கிறத்திற்கான முயற்சியை அனுமதிக்கவே முடியாது என்று நான் நினைக்கிறன். எனக்கு நியமாகவே தமிழ் பெண் என்பதற்கு விளக்கம் தெரியல. தமிழ் பேசுகிற பெண் என்றால் எனக்கு விளங்குது. நான் தமிழ் மொழி சார்ந்த குடும்பத்தில பிறந்திருக்கிறன், தமிழ் நாட்டில நிற்கிறன். அதனால எனக்குத் தமிழ் தெரியுது. ஆனால் தமிழ் பெண் அப்படி என்று தனியான அங்க இலட்சணங்கள் எல்லாம் இருக்கா என்று எனக்குத் தெரியல. அதுக்கு பின்னாடி நீங்கள் அடக்கஒடுக்கம், அதிர்ந்து பேசாம இருக்கிறது, புருசனுடைய காலத்தொட்டுக் கும்பிடுகிற பண்பாடு எல்லாம் என்றைக்குமே நம்முடைய பண்பாடாக என்றைக்குமே இருந்ததில்லை. பார்க்கப்போனல் பங்கரமான பார்ப்பனியம் சார்ந்த ஒரு பண்பாடு. கணவன் இறந்தவுடன் மனைவியைப்போட்டு சிதையில கொழுத்தனம் என்று சொல்லுறது பார்ப்பனர்களுடைய வழக்கம். இதை வந்து தமிழர்களுடைய மரபு, பண்பாடு சார்ந்து கொண்டு வரவேண்டும் என்பது எனக்கு நிஜமாகவே விளங்கவில்லை. </div><br /><div></div><br /><div><strong><em>8. அண்மையில் ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகளை “பெயல் மணக்கும் பொழுது” என்று தொகுத்து வெளியிட்டிருக்கிறீங்க. அதன் நோக்கம் பற்றி சொல்ல முடியுமா? </em></strong></div><br /><div>பொதுவாக பெண் படைப்பாளர்கள் தொடர்பான ஒரு உரையாடல் வலுவாக வந்துகொண்டிருக்கிற காலம் இது. அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில பெண் கவிஞர்களுடைய வெளிப்பாடுகள் பற்றி நிறைய சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கு. அப்ப அண்டையில இருக்கக் கூடிய நாடான ஈழத்தில் இருந்து எழுதக்கூடிய பெண்களுடைய கவிதைகள். உண்மையிலேயே இதில நான் தொகுத்திருப்பது 86க்கு பின்னரான அதாவது “சொல்லாத சேதி” தொகுப்பிற்கு பின்னர் வந்தவைகள். அந்த வகையில் மிகவும் நெருக்கடி வாய்ந்த சூழலில இன்றைக்கு உலகெங்கிலும் பரவியிருக்கக் கூடிய ஒரு சமூதாயமாக, வீடையும், நாட்டையும் தொலைத்த ஒரு சமூதாயமாக இருந்து கொண்டிருக்கிற ஈழத்தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுடைய வெளிப்பாடக இவை இருக்கின்றன. அப்ப கிட்டத்தட்ட வாழ்வா, சாவா என போராட்டம் நடந்துகொண்டிருக்கிற நேரத்தில கவிதை எழுதனும் என்கிற முனைப்பு இவங்களுக்கு வருவது என்பதும், அந்தக் கவிதையே அவங்களுடைய வெளிப்பாட்டிற்கான ஊடகமாக இருக்கிறது என்பதும் உண்மையிலேயே எனக்கு வியப்பைத் தருகிறமாதிரி இருக்கின்றது. அதே சமயம் எரிகிற வீட்டுல பிடுங்கினது இலாபம் என்கிறமாதிரி இப்ப வந்து உலகெங்கிலும் பரவியிருக்கிற காரணத்தினால ஈழ என்கிற அடைமொழியைச் சேர்த்தா எதை வேண்டுமானாலும் விற்று விடலாம் என்ற நிலைமையும் வந்துகிட்டிருக்கு. இப்ப தமிழகத்திலேயே நிறைய தொகுப்புகளும், எழுத்துகளும், நிறைய விசயங்களும் நடந்துகிட்டிருக்கிறது எனக்கு விளங்குகிறது. அதனால் தான் இதைத் தொகுக்கும் போது பெரிய பதிப்பகம் சார்ந்து போகாமல், ஒரு சிறு பதிப்பகமாக இந்தப் பெண்களுடைய எழுத்து அல்லது படைப்புலகத்தை ஒரு பெண்ணியம் சார்ந்த சிந்தனையோட பொருத்திப்பார்க்கக் கூடிய ஒரு Discourse குள்ள வரணும் என்றுதான் நான் இந்தமாதிரியான தொகுப்பாக கொண்டுவந்திருக்கிறன். இன்னொன்று நான் உண்மையிலேயே ஈழத்துப் படைப்பாளிகள் குறிப்பாக பெண்களும் அதை ஒத்துக்கொள்ளுவாங்கள் என்று நினைக்கிறன். எல்லா இடங்களிலும் இருந்து வரக்கூடிய படைப்புகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கம்மி.. இன்னொன்று தினசரி வாழ்க்கையைப் போரிலும், இன்னொரு பக்கம் அன்றாட உழல்வில இருக்கக் சூழலில, ஆறஅமர இருந்து புத்தகங்களை தொத்து வெளியிடுவதற்கான மனம் பல பேருக்கு இருக்கு என்று தெரியும். இந்தப் படைப்பாளிகளிலேயே பல பேருக்கு இருக்கு. ஆனா எவ்வளவு தூரம் செய்யமுடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. இது வந்து முதல் கல்லை எடுத்துப் போட்டிருக்கிறம். இதில் இருந்து இன்னும் பல படைப்புகள் வரும், வரவேண்டும் என்கிற ஆசை எனக்கிருக்கு. இந்தத் தொகுப்பிலும் நிறையப் பயங்கள் இருக்கு. இதை எழுதினவர் ஆணா, பெண்ணா? என்பதும் சரியாகத் தெரியல. பெயரை வைத்துக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியெல்லாம் சில சிக்கல்கள் இருக்கு. நிச்சயமாக இத் தொகுப்பில பிரச்சனைகள் இருக்கு என்று தான் நான் சொல்லுவன். </div><br /><div></div><br /><div><strong><em>9. இவ்வாறன உங்கள் முயற்சியை, வியாபார நோக்கம் தான் முதன்மையாக இருக்கிறது என்று சொல்லுபவர்களுக்கு உங்கள் பதில் என்ன?</em></strong> </div><br /><div>கண்டிப்பாக இது வந்து உலகச் சந்தையை நோக்கிய ஒரு செயற்பாடுதான் அப்படித்தான் பல தொகுப்புகள் வெளிவருக்கின்றது. கூடிய வரைக்கு commercialலாக ஆக்கக் கூடாது என்ற எண்ணத்தோட பலபேருடைய contributionனில தான் இந்தத் தொகுப்பு வந்திருக்கு. இதை வெளியிட்டிருக்கிற ‘மாற்று’ டைய முதல் வெளியீடு இது. இதை வெளியிட்டவருக்கு பெரிய முதல் பலமோ, பொருளாதார பலமோ கிடையாது. ஆனால் புத்தகத்தைப் பையில தூக்கிக் கொண்டு போய் கண்காட்சி கண்காட்சியாக விற்றுவிட்டு வருகிற நபர் அவர். அப்போ பெரிய கோட்டை கட்டவில்லையானாலும் போட்ட காசை எடுக்கிற அளவிற்கு contribute பண்ணின நண்பர்களுக்கு திருப்பித் தருகிற அளவிற்காவது காசு எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கு. ஆனால் மிகப்பெரிய பைசா கிடைக்குமென்றோ, யாராவது முதல் கொடுத்தோ இது செய்யப்படவில்லை. அந்தக் காரணத்திற்காகவே எந்த ஈழம் தொடர்பான, எந்த அமைப்புகளிடமோ, தனிநபர்களிடமோ பொருளாதார உதவி பெறுவதில் எனக்கு மனசு சரிப்பட்டு வரவில்லை. அதனால தான் கேட்கவும் இல்லை.<br /></div><br /><div><em><strong>நன்றி: வைகறை</strong></em> </div>Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-23137978.post-1163992151984964482006-11-19T22:05:00.001-05:002006-11-21T22:11:36.580-05:00ரவிராஜின் கொலையும் கறை படிந்த எமது கரங்களும்!கடந்த வாரம் இலங்கையின் யாழ் மாட்டவ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இனம்தெரியாத நபரினால், தலைநகர் கொழும்பில் வைத்து, சுட்டுக்கொல்லப்பட்டார்.<br /><br />இலங்கை பாதுகாப்புப் படையினரால் தமிழ் மக்களிற்கு எதிராக நடாத்தபடும் வன்முறைகளுக்கெதிராக, அண்மைக்கலாமாக மிக அதிகமாக குரல் கொடுத்து வருபவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக ரவிராஜ் விளங்கினார்.<br /><br />கொழும்பிலும் அதன் புறநகரங்களிலும் வாழ்ந்து வரும் தமிழர்களையும், தமிழ் வர்த்தகர்களையும் கடத்துதல், பணம் பறித்தல், கொலை செய்தல் போன்ற செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அவற்றுக் கெதிராக கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து, சம்பந்தப்பட்வர்களுக்கு ஓரளவேணும் நெருக்கடிகளை கொடுப்பதற்கு ஏதுவாக இருந்தவர்களில் ரவிராஜூம் ஒருவர்.<br /><br />கொழும்பில் பரவலாக இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் யுத்தத்திற்கு எதிரான ஆர்பாட்ட ஊர்வலங்களின் போது முன்நின்று பங்கேற்பதும், அரசபயங்கரவாதத்திற்கெதிராக கருத்துக்களையும், கோஷங்களையும் எழுப்பியது மட்டுமல்லாமல், சிங்கள வானொலிகளின் நேர்காணலின் போது அரசிற்கெதிராகவும், அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க்குழுக்களுக்கு எதிராகவும் கருத்துக்களை கடும் தொனியில் முன்வைத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.<br /><br />ரவிராஜ் கொல்லப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தனியார் தொடர்புசாதமொன்று அவரை பேட்டி கண்டது. அதன் போது அவர் இலங்கை ஜனாதபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏ9 பாதை விவகாரம் தொடர்பாக சாவால் விடும் தொனியில் மேற்கண்டவாறு கருத்தினை தெரிவித்திருந்தார். ‘முடிந்தால் ஜனாதிபதி அம்பாந்தோட்டைக்கான தரைவழிப் பாதையை மூடிவிட்டு கடல்; மார்;க்கமாக அப்பகுதிக்கு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கட்டும்’ என்று.<br /><br />அதுமட்டுமல்லாமல் அவர் கொல்லப்படுவதற்கு முதல் நாள் கொழும்பில் இருக்கும் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் காரியலயத்திற்கு முன்பாக, வாகரையில் நடந்த கொலைச் சம்பவத்திற்கு எதிராகவும் அங்கு பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவு அனுப்பப்பட வேண்டியும், இலங்கை அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தை முன்னின்று நடத்தியவர் ரவிராஜ்.<br />இச் சம்பவங்களின் பின்னணியிலேயே ரவிராஜின் கொலையைப் பார்க்கவேண்டியுள்ளது.<br /><br />கொழும்பில் வெளிவரும் ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒன்றின் தகவலின் படி அம்பாறை மாவட்ட பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினருக்கும் இக்கொலைக்கும் தொடர்பிருப்பதாக இலங்கை புலனாய்வுத்துறையினை மேற்கோள் காட்டி அப்பத்திரிகை செய்தி வெளிட்டுள்ளது. ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவையும் ரவிராஜ் அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.<br /><br />இவ்வாறான அரசியல் கொலைகள் இலங்கையில் மிக மலிந்து போய்யிருப்பது கண்கூடு. தனிமனிதன் தொடக்கம் குழுக்கள், அரசியல் கட்சிகள் என்று இலங்கையில் வாழும் எந்த சமூக அமைப்பாக இருந்தாலும், அவர்கள் தம்முடைய கருத்தினை வெளிப்டையாக தெரிவிக்கமுடியாத சூழ்நிலை இன்று எல்லா மட்டங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமாக இருந்தாலும் சரி, தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடுகிறோம் என்று சொல்லும் இயக்கங்களாக இருந்தாலும் சரி, விடுதலைப்புலிகளின் ஜனநாக விரோத செயற்பாடுகளை எதிர்க்கும் ஏனைய குழுக்களாக இருந்தாலும் சரி கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளத் திராணியற்ற சமூகமாக ஒட்டுமொத்த இலங்கையர்களும் மாறிக்கொண்டு வருவது இலங்கையின் எதிர்காலம் தொடர்பாக ஐயத்தையே ஏற்படுத்துகின்றது.<br /><br />இலங்கையின் தலைநகரில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நிராயுதபாணியான தமிழ் அரசியல் வாதியின் படுகொலையை உரத்து, எதிர்த்து குரல் கொடுக்க, உலக அரங்கிலே கொலை வெறியர்களை அம்பலப்படுத்த எந்தவொரு நேர்மையுள்ள தமிழனுக்கும் மனச்சாட்சி இடம் தாராது என்பது அப்பட்டமான உண்மை. கருத்து முரண்பாட்டினால் சக நண்பன் தொடக்கம் மாற்று இயக்க உறுப்பினர், தமிழ் தலைவர்கள், அரசியல் எதிரிகள் என்று சகோதப்படுகொலைக் கலாசாரத்தை திறம்படவே கட்டிக்காத்து, அதன்படி வழிநடத்தப்படும் எமது இளைஞர்களை எம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை.<br /><br /><span style="color:#ff0000;">எமது கரங்களும், குரல்வளைகளும் கறைபடிந்திருக்கும் போது எப்படி எம்மால் சிங்கள அரசபயங்கரவாதத்திற்கு முன்னால் குரல்களை உயர்த்த முடியும்? விடுதலையை நோக்கி நீள வேண்டிய எமது கரங்களின் இடுக்குகளுக்குள் மாற்றுக் கருத்து சகோதரப்போராளியின் குரல் வளை, ஏனைய தமிழ் தலைவர்களின் நெற்றியில் குறிவைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கி, அப்பாவி முஸ்லீம் மக்களின் வாழ்வுரிமை….<br /></span><br />இவ்வாறாக எம்மைச்சுற்றி அயோக்கியத்தனங்களை<br />கையகப்படுத்திக்கொண்டு, சர்வதேசமே எம்மை நோக்கிப்பார்! எம்மீது இழைக்கப்டும் அநீதியை இன்னுமா பார்த்துக்கொண்டிருக்கிறாய்! உனது நீதி எங்கே! நியாயம் எங்கே! என்று புலம்பெயர் நாடுகளில் புலம்பிக்கொண்டிருப்பதால் மட்டும் எம்மை ஓடோடி வந்து சர்வதேசம் காப்பாற்ற மாட்டாது. ஏனென்றால் எமது கறை படிந்த கரங்களை அவர்கள் பல வருடங்களுக்கு முன்னரே நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் தான் அவர்கள் எமது விடையத்தில் நடந்துகொள்வார்கள்.<br /><br />எனவே எமது கறைபடிந்த கரங்ளை கழுவிக்கொள்ளவும், இனிமேலும் கறைபடியாமல் பார்த்துக்கொள்ளவும் முதலில் கற்றுக்கொள்ளுவோம்.Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-23137978.post-1158411571989072452006-09-16T08:55:00.000-04:002006-11-01T23:21:23.383-05:00சர்வதேச சமூகத்திற்காக ஒரு பேச்சுவார்த்தை<span style="font-size:85%;"><em><strong>‘வைகறை’ பத்திரிகையின் ஆரியர் தலையங்கம்</strong></em></span><br /><br />ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் இடையே மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை அக்டோபர் முற்பகுதியில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெறும் என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, முன்நிபந்தனையற்ற பேச்சுவார்ததைகளுக்கு இருதரப்பினரும் இணங்கியுள்ளதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சோல்ஹைய்ம், பெல்ஜியத்தில் நடைபெற்ற மகாநாட்டின் இறுதியில் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்த மோதல்கள் தற்காலிகமாகவேனும் தணிந்துவிடும் என்பது வரவேற்கத்தக்கதே.<br /><br />ஆயினும் இப்பேச்சு வார்த்தைகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் பூரண விருப்புடன் இணங்கவில்லை என்பதை, சோல்ஹெய்மின் அறிவித்தலைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேக்கலிய ரம்புக்வெல வெளியிட்ட கருத்துக்கள் உணர்த்துகின்றன. முதலில், நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைகளுக்கு தாம் இணங்கியதை மறுதலித்த அவர், அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்காமல், பேச்சுவார்த்தைக்கான இடம் ஆகியவற்றை ஒரு தலைப்பட்சமாக இணைத்தலைமை நாடுகள் நிர்ணயித்துள்ளதையிட்டு அதிருப்தியையும் தெரிவித்துள்ளார். அத்துடன், முல்லைத்தீலில் விமானக் குண்டு வீச்சில் மாணவிகள் கொல்லப்பட்டதை இணைத்தலைமை நாடுகள் கண்டித்திருப்பதையிட்டும் கவலை தெரிவித்துள்ளார்.<br /><br />ஆக மொத்தத்தில், இணைத்தலைமை நாடுகளின் ஆழுத்தங்களுக்கும் நெருக்குதல்களுக்கும் ஈடுகொடுக்க முடியாத நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இப் பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கியுள்ளது என்பது தெளிவாக உள்ளது. திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து, விடுதலைப்புலிகள் அமைப்பு தற்சமயம் இராணுவ ரீதியில் பலவீனமாக உள்ளது என்ற கணிப்பிற்கு இலங்கை இராணுவம் வந்துள்ளது. இக்கணிப்பின் அடிப்படையில், இன்னும் சிறிது காலத்திற்கு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் மேலும் பலவீனப்படுத்துவதற்கே விரும்புகின்றது. இதனையே, ஜே.வி.பி. ஹெல உறுமய போன்ற கட்சிகளும் முன்வைக்கின்றன.<br /><br />ஆயினும் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை மீறிச் செயற்பட முடியாத நிலையில், பேச்சு வார்த்தைகளுக்கு இணங்கியுள்ளது. விடுதலைப் புலிகளும், இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து இராணுவம் பின்வாங்காத வரையில் பேச்சு வார்த்தைகளுக்கு இணங்கமாட்டோம் எனத் தெரிவித்திருந்தனர். எனினும், சர்வதேச சமூகத்தின் அழுத்தமும், களயதார்த்தமும் அவர்களையும் பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க வைத்துள்ளது.<br /><br />அதேசமயம், கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற மோதல் சம்பவங்களால், இருதரப்பினருக்கும் இடையே பரஸ்பர அவநம்பிக்கை அதிகரித்துள்ளதே அல்லாமல் எந்த விதத்திலும் குறையவில்லை. மொத்தத்தில், இருதரப்பினரும் இதுவரையில் கொண்டிருந்த நிலைப்பாடுகளிலிருந்து மாறாமலேயே பேச்சுவார்த்தைக்கு இணங்கியுள்ளளனர். ஆகவேதான், இப்பேச்சுவார்த்தைகள், நீதியான ஓர் சமாதானத்தை நோக்கிய முன்நகர்விற்கு வழிசமைக்கும் என எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் இப்பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ள இருதரப்பினருக்கும் இடையே ஒரேயொரு விடயத்தில் மட்டும்தான் இணக்கப்பாடு உள்ளது.<br /><br />அதாவது சர்வதேச சமூகத்தைத் திருப்திப் படுத்துதல் என்பதில் மட்டும்தான் இருதரப்பினருக்கும் இடையே பொதுவான இணக்கப்பாடு உண்டு. ஆகவே, இம்முறை பேச்சு வார்த்தைகள் கணிசமான நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கலாம்.<br /><br />இப்பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகையில், இருதரப்பினரும், தத்தமது இராணுவ பலத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதிலேயே, முழுக்கவனத்துடன் ஈடுபடுவர். இது சர்வதேச சமூகம் அறியாததொன்றல்ல. ஆயினும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தினால் ஏற்படப்போகின்ற போரற்ற சூழல் வரவேற்கத்தக்கதே. போரற்ற சூழல் தானாகவே சமாதானத்திற்கு ஒரு பொழுதும் இட்டுச் செல்லாது. இப்போரற்ற சூழலில், இலங்கையின் இன முரண்பாட்டிற்கும் யுத்தத்திற்குமான, அடிப்படைக்காரணிகள் விரைவாக இனங்காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான மார்க்கங்கள் காணப்படவேண்டும். அதாவது, இனப்பிரச்சினைக்கு, நீதியான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டால் மட்டுமே, இப்பேச்சுவார்ததைகள் அர்த்தமுள்ள ஓர் சமாதானத்தை நோக்கிய முன் நகர்விற்கு இட்டுச் செல்லும். இவ்வாறான ஓர் தீர்வை முன்வைப்பதற்கு சர்வதேச சமூகம் தற்போது பிரயோகிக்கும் அழுத்தத்தைவிட அதிகமான அழுத்தத்தை இலங்கை அரசு மேல் செலுத்த வேண்டி ஏற்படலாம். அதனைச் செய்ய வேண்டியதும் இன்றைய காலத்தின் கட்டாயம் என்றே தோன்றுகின்றது.<br /><br /><em><span style="font-size:85%;">நன்றி: 'வைகறை' 15.09.2006</span></em>Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-23137978.post-1156708636553314702006-08-27T15:52:00.000-04:002006-08-27T23:23:31.030-04:00தேனி - நிதர்சனம் இணையத்தளங்களின் பொறுப்பற்ற போக்கு!தற்போது தமிழில் ஏராளமாக இணையத்தளங்கள் இலங்கைச் செய்திகளையும், தமிழர் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளையும், ஏனைய பல விடையங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.<br /><br />இவற்றில் கணிசமான இணையத்தளங்கள் புலிகளின்; அரசியலுக்கெதிராகவும், அவர்களின் போராட்ங்கள், சிந்தனைகள், நடவடிக்கைள் போன்றவற்றுக்கெதிராகவும் தமது எதிர்ப்பினையும், கருத்தினையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.<br /><br />இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் இணையத்தளங்கள் பெரும்பாலும் புலிகளினால் தடைசெய்யப்பட்ட, ஏனைய தமிழ் இயக்கங்களினதும், அல்லது புலி அரசியலுக்கு எதிரான கருத்துக் கொண்டவர்களினாலும் நடாத்தப்படுகின்றது.<br /><br />அந்த வகையில் தேனி இணையத்தளம் பரவலாக அறியப்பட்ட ஒன்றாம். ஆரம்ப காலங்களில் தேனியில் வரும் எழுத்துகள் புலிகளின் போக்கிற்கு மாற்றுக் கருத்தாக அல்லது புலிகளின் அரசியலை கருத்தியல் ரீதியாக விமர்சிக்கும் போக்கினைக் கொண்ட தளமாக காணக்கூடியதாக இருந்து. பின்னர் வெறும் புலி எதிர்ப்புப் பிரச்சாரமாகவும், புலிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தகவல்களை திரித்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதில் சிறிதும் தயக்கம் காட்டாமல் வெளியிடும் அளவிற்கு அவர்களின் வறட்டு அல்லது சீரழிந்த அரசியல் சிந்தனை மேலோங்கியிருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கின்றது.<br /><br />கடந்த வருடம் புங்குடுதீவு என்னும் கிராமத்தில் ஒரு இளம் பெண் தனது பெயரியதாயார் வீட்டுக்கு ஒவ்வொரு மலைப்பொழுதிலும் சென்று பின்னர் மறுநாள் காலையிலேயே தனது வீட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்பெண் பெரியதாயார் வீட்டுக்குச் செல்லும் போது, இலங்கை கடற்படையினரின் முகாமைத் தாண்டிச் செல்வதும் வழக்கம். அவ்வாறு ஒரு நாள் சென்ற போது அங்கிருந்த படையினர் சிலரினால் பலவந்தமாக, கூட்டிச் செல்லப்பட்டு, முகாமிற்கு அருகில் இருந்த, கைவிடப்பட்ட வீட்டிற்குள் வைத்து அந்தப்பெண்ணை பாலியல் வல்லுறவு மேற்கொண்டு, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் இருந்த பாழ் அடைந்த கிணற்றினுள் வீசிவிட்டுச் சென்றுள்ளார்கள்.<br /><br />இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண், அவ்வ+ர் சாதாரண கிராமவாசி என அப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களுடனும், அவ்வ+ர் பிரதேச மகளிடமும் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. ஆனால் இந்தச் செய்தியை தேனியில் வேறு விதமாக குறிப்பிட்டிருந்தார்கள். அதாவது, அந்தப் பெண் ஒரு புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்லது புலிகள் அமைப்போடு சம்பந்தப்பட்டவர் என்ற தோரணையில் கட்டுரையாளர் எழுதியிருந்தார். அதை தேனி இணையத்தளம் வெளியிட்யிருந்தது.<br /><br />ஒரு செய்தியை வெளியிடும் போது அதன் நம்பகத் தன்மையை ஆராய்ந்திருக்க வேண்டும். அந்தக் கட்டுரையை வாசிக்கும் போது வேணுமென்றே திரித்து எழுதப்பட்டதாக தெரிகிறது. இதனால் தேனியில் வரும் ஏனைய உண்மையான செய்திகள், கட்டுரைகளும் உண்மைக்குப் புறம்பானதாக எண்ணத்தோன்றும் மனநிலையை உருவாக்கும்.<br /><br />இதேபோன்று கண்மூடித்தனமாக புலிகளை ஆதரிக்கும் இணையத்தளமான ‘நிதர்சனம்’ ஆதாரமற்ற தகவல்களையும், மாற்றுக் கருத்தாளர்களையும், முற்போக்கு நிந்தனையாளர்களின் நடவடிக்கைகளுக்கு சேறு ப+சும் விதமாகவும், காழ்ப்புணர்வுகளை கொட்டித்தீர்ப்பதே தமது தலையாய கடமையாகவும் எடுத்துகொண்டு செய்திகளை பரப்புவதில் முன்நிற்கின்றார்கள். இவர்களின் கருத்திற்கு மாற்றுக் கருத்துக்கொண்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை புனைந்து வெளியிடுவதில் இவர்களும் சளைத்தவர்கள் அல்ல.<br /><br />அண்மையில் கொழும்பு தெகிவளையில் சுட்டுக்கொல்லப்பட்ட கேதீஸ் லோகநாதன் பற்றிய செய்தியை வெளியிடும் போது கடைசிப் பத்தியில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்கள். ‘கேதீஸ் தொடர்பான 'அண்டவாளங்களை' வெகுவிரையில் வெளியிடுவோம்’ என்று. கேதீஸ் தொடர்பாக விமர்சனங்கள் இருப்பது வேறு, சேறு ப+சுவது வேறு. விமர்சனங்கள் காழ்ப்புணர்வற்றனவாக இருக்க வேண்டும். கேதீஸ_க்கு ஈழத்தமிழர் தொடர்பான பிரச்சினையில் நிறையவே பங்கிருக்கின்றன. அதற்கான அவரின் உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. (25.80.2006 இல் கனடா - வைகறை பத்திரிகையில் அவர் தொடர்பாக கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கின்றது) ஆனால் நிதர்சனம் போன்ற தளங்கள் இம்மாதிரியான செய்திகளை தொடர்ச்சியாக வெளியீடுவார்களானால் அவர்கள் தொர்பான நம்பகத்தன்மையை இழந்து விடுவார்கள்.<br /><br />செய்தித் தளங்கள் தங்களுக்குரிய உரிமையையும், சுதந்திரத்தையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து செயற்பட வேண்டும். இல்லாது விடின், மக்கள் ஊடகங்களாக இவைகள் வலம் வரமுடியாதவைகளாகவே இருக்கும்.Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23137978.post-1156587387033280652006-08-26T05:52:00.000-04:002006-08-26T11:15:33.113-04:00ஆயுதக் கொள்வனவு முயற்சியில் தமிழ் கனேடியர்கள் கைது!விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட விடுதலைப் புலிகளுக்கு பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பிரிவினரால் (F.B.I) கைது செய்யப்பட்ட எட்டு தமிழர்கள் அமெரிக்க நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.<br /><br />அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு போர்த் தளபாட கொள்வனவில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. இராணுவ உபகரணங்கள் கொள்வனவு தொலைத் தொடர்பு மற்றும் வேறு தொழில்நுட்ப உபகரண கொள்வனவு, நிதி சேகரிப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களூடாக பணத்தை அனுப்பிவைத்தல், அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க முற்பட்டது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த சதாஜன் சரத்சந்திரன் (26), சகிலால் சபாரட்ணம் (27), திருத்தணிகன் தணிகாசலம் (37), நடராசா யோகராசா (52), முருகேசு விநாயகமூர்த்தி (57), விஜயசந்தர் பற்பானந்தன் (44), திருக்குமரன் சிவசுப்பிரமணியம் (27) இவர்களோடு தென்னிந்தியாவைச் சேர்ந்த நாச்சிமுத்து சோகிரட்டீஸ்( 54) ஆகியோரே கடந்த 19 ஆம் திகதி F.B.I பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.<br /><br />ஒன்பது லட்சம் டொலர் முதல் 9 லட்சத்து 37,500 டொலர் வரை முதலில் இவர்கள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவிருந்ததாகவும், விமான எதிர்ப்பு ஏவுகணையில் ஒன்றைப் பரிசீலிப்பதற்காக எஸ்.ஏ- 18 ரக ஏவுகணை ஒன்றை இவர்களில் ஒருவர் ஓரிடத்திற்குக் கொண்டு சென்றதாகவும் தெரியவருகிறது.<br /><br />கைது செய்யப்பட்டவர்களில் பலருக்கு விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளிருந்ததுடன் அமெரிக்க அதிகாரிகளுக்குப் பெருமளவு லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் புலிகளுக்கான தடையை நீக்கவும் முயற்சித்து வந்ததாகவும் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவித்துள்ளார். இவர்களது கைது சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளரிடம் கேட்டபோது, கைது செய்யப்பட்வர்களுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் நாம் செயற்படும் முறை இதுவல்ல என்றும் இப்படி ஒரு காரியத்தை நாம் ஒருபோதும் செய்தது கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.<br /><br />சதாஜன் சரத்சந்திரன், சகிலால் சபாரட்ணம்இ திருத்தணிகன் தணிகாசலம் ஆகிய மூவரும் Waterloo பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்களாவர். சதாஜன் சரத்சந்திரன் கனேடிய தமிழ் மாணவர் அமைப்புக்கு (Canadian Tamil Students Association) சிலகாலம் தலைவராக இருந்ததுடன்இ 2004ம் ஆண்டு புரட்டாதி மாதம் ரொரன்ரோவில் நடாத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்சியின் ஏற்பாட்டாராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது பொங்கு தமிழ் நிகழ்வு தொடர்பாக இவரது பேட்டி வைகறை பத்திரிகையில் வெளியாகியது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இவர்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குமாகச் சேர்த்து அனைவருக்கும் 30 வருடங்களுக்கும் குறையாத தண்டனை வழங்கப்படுமெனவும் தெரியவருகிறது.<br /><br />இந்த விவகாரத்தின் தொடர்சியாக மேலும் மூன்று தமிழ் கனேடிய இளைஞர்கள் ரொறன்ரோவில் RCMP பொலிசாரால் கைது செய்யப்படடுள்ளனர். Waterloo பல்கலைக்கழக மாணவரான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா (26) கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் இதே பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற பிரதீபன் நடராஜா (30) மற்றும் ரமணன் மயில்வாகணம் (29) ஆகியோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். ரமணன் மயில்வாகணம் University of Waterloo Tamil Students Associationன் உதவித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இவர்களை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கான விசாரணைக்காக பிரம்ரன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொலிசார் ஆஜர்படுத்தவுள்ளனர்.<br /><br />இவர்களது கைது தொடர்பாக கனேடியன் தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் Puபாலபிள்ளை கருத்துத் தெரிவிக்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் தமிழ்சமூக அமைப்புகள் பலவற்றில் இணைந்து செயற்பட்டவர்கள் என்றும், எவரும இப்பாடியான அமைப்புக்களில் இணைந்து செயற்படமுடியும் என்றும், என்னைப் பொறுத்தவரையில் நான் உறுதியாக நம்புகின்றேன், அவர்கள் “Loose cannons..” (Dangerously uncontrollable people) போல் செயற்பட்டுள்ளார்கள் எனத்தெரிவித்துள்ளார்.<br />RCMP பொலிசார் இக் கைது நடவடிக்கை பற்றிக் குறிப்பிடுகையில் FBI யினரும் RCMP யினர் குறிப்பாக RCMP National security program and the Integrated National Security Enforcement Team (INSET) in Toronto மற்றும் அமெரிக்க சட்ட அமூலாக்கப் பிரிவினர் ஆகியோரின் ஒருங்கிணைக்கப்டட்ட நடவடிக்கையின் காரணமாக விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்ட பலர் மீது அமெரிக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.<br /><br />இக்கைதுகள் தொடர்பாக கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Stockwell Day நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில், மேற்படி கைதுகள்இ தகுந்த சமயத்தில்; தமது அரசு எடுத்த நடவடிக்கையினை பட்டவர்தனமாக வெளிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் கடந்த ஏப்பிரல் மாதம்இ எமது மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக விடுதலைப்புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்பது என்ற காததிரமான முடிவினை எடுத்தோம். மேற்படி கைதுகள் பயங்கரவாத அச்சம் தொடர்பான எமது அரசின் கடும் கண்காணிப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.<br /><br /><span style="font-size:78%;"><em>நன்றி: வைகறை (25.08.2006)</em></span>Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23137978.post-1156585274506195252006-08-26T05:40:00.001-04:002006-08-26T15:31:39.840-04:00கனேடிய தமிழ் ஊடகங்களும், தமிழர்களும்!கனடாவில் பத்திற்கும் மேற்பட்ட வாராந்த தமிழ்ப்பத்திரிகைள் வெளிவருகின்றன. நிறையப் பக்கங்களுடன் வெளிவரும் இப் பத்திரிகைகளில் விளம்பரங்களே அதிகமாக காணப்படுகனிறன.<br /><br />‘விளம்பரங்களே பத்திரிகையின் அச்சானி’ இது சான்றோர் வாக்கு. ஆனால் இங்கே விளம்பரங்களுக்கே பத்திரிகை என்று ஆகிப்போற்று. ஒரு பத்திரிகையின் தரமும், போக்கும் அச்சமூகத்தை பிரதிபலிக்கும் காரணிகளில் ஒன்று. ஆனால் எந்தப் பத்திரிகையும் அதை கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை.<br /><br />சில காலமாக என்னுடைய அவதானிப்பின் படி, பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளும், கட்டுரைகளும், அல்லது ஏனைய படைப்புகளும் ஒரு சார்பானதாகவே இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதாவது வெளியிடும் செய்திகளிலோ அல்லது கட்டுரைகளிலோ எந்தளவிற்கு நம்பகத்தன்மை, உண்மைத்தன்மை போன்றவற்றை யாரும் கருத்தில் கொள்வதில்லை. அல்லது அது பற்றி சிலாகிப்தும் இல்;லை. தமது சார்புநிலைகளுக்கு ஏற்றமாதிரி செய்திகள் வெளிவரவேண்டும் என்பதே இங்கு வாழும் பெரும்பாலானவர்களின் கணிப்பு அல்லது விருப்பம்.<br />இதை எழுதுவற்கு தூண்டியதன் காரணம் என்னவென்றால், அண்மையில் இலங்கையில் நடபெற்றுக் கொண்டிருக்கின்ற போர்ச் சம்பங்கள் தொடர்பாக இலண்டன் பி.பி.சி. பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நேரடித்தகவல்களாகவும், நேர்காணல் ஊடாகவும் தனது சேவையை நடத்திக்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக புலிகளின் இராணுவப்பேச்சாளர் இ.இளந்திரையனிடம் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டபோது அவர் இரத்தினச்சுருக்கமாக சில பதில்களை தெரிவித்திருந்தார். அது பலரின் கவனத்தையும் பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.<br /><br />இதே போன்று இன்னொரு முறை அவருடனான நேர்காணலின்போது அதாவது மூதூர் யுத்தமும், முஸ்லீம் மக்கள் இடம்பெயர்வும் தொடர்பானது. அப்போது இளம்திரையனின் பதிலில் கொஞ்சம் நெருடல் காணப்பட்டது. இதைக்கேட்டுக் கொண்டிருந்த புலம்பெயர் மக்கள் (ஈழத்தில் பி.பி.சியின் சேவையை 99வீதமானவர்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை என்பது எனது கருத்து) பொங்கி எழுந்துவிட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இளந்திரையனை சங்கடத்தில் மாட்டும் கேள்விகளை பி.பி.சியினர் கேட்கக் கூடாது என்பது தான். அல்லது இலங்கை இராணுவப்பேச்சாளரிடம் இவ்வாறு பி.பி.சியினர் நடந்துகொள்வார்களா? என்பதே. இம்மாதிரியான மனநிலையிலேயே இன்று அனேகமான புலம்பெயர் மக்கள் வாழ்கின்றார்கள். இவ்வகையினரின் மனநிலையை மேலும் மோசமாக்க புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்படும் தனியார் வானொலிகள், பத்திரிகைகள் வலுவ+ட்டுகின்றன.<br /><br />23ம் புலிகேசியில் வரும் வசம்போல் சொல் புத்தி, சுயபுத்தி. புலம்பெயர் மக்கள் சொல் புத்தியாகவே இருக்கிறார்கள். உய்த்துணரும் பழக்கத்தை இவர்கள் ஏற்படுத்திக்கொள்வதில்லை.<br /><br />தற்போது பி.பி.சியை இத்தமிழர்கள் கேட்கக் கூடாது, புறம் தள்ள வேண்டும் என்று புலம்புகிறார்கள்.<br /><br />‘சந்திரனைப் பார்த்து நாய் வவ் வவ் வவ்.... செய்தா யாருக்கு நட்டம்?Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23137978.post-1156095244350228192006-08-20T13:32:00.000-04:002006-08-22T11:28:50.883-04:00அமைதிப்பேரணில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேடியவை!கடந்த வாரம் கொழும்பில் ‘தேசிய போருக்கு எதிரானவர்கள’ நடடித்திய அமைதிப்பேரணியில் குறுக்கிட்ட ‘தேசிய பிக்கு முன்னணியினர்’ கிளிநொச்சிக்குப் போய் அமைதி குறித்து பேசுங்கள் என்று போருக்கு எதிரானவர்களிடம் வாதிட்டபோது இருசாரார்களுக்கிடையிலும் வாக்குவாதமும், மோதலும் மூண்டு, பிக்குமார்கள் பரஸ்பரம் அவர்களின் அங்கிகளை (உடை) பிடித்து இழுபட்டதை இணையத்தள புகைப்படங்களிலும், ஏனைய செய்திகளிலும் காணக்கூடியதாக இருந்தது.<br /><br />இது தொடர்பாக தமிழர் தரப்பு செய்திகளில் மிகைப்படுத்தி, அவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அளவிற்கு மீறிய நகைப்புடன் பார்க்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.<br /><br />கொழும்பு நகரில் பல அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலா மக்கள் சிங்கள இனத்தவர்கள். அவர்களோடு சில சிங்கள அரசியல்வாதிகளும், ஏனைய சமாதான விரும்பிகளும் இலங்கையில் போர் மூண்ட காலங்களில் இருந்து இன்று வரை அவ்வப்போது போருக்கெதிராக தமது எதிர்ப்பினையும், ஆர்பாட்ட ஊர்வலங்களையும், நடத்தியும், போரோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு, நாட்டில் வாழும் மூவின மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு போரை முடிவிற்கு கொண்டுவரும் படியும் அறிக்கைள் அனுப்புவது வழக்கம்.<br /><br />அது போன்றே இம்முறையும் ஒரு நிகழ்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய இலங்கையின் சூழலில் யுத்தத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த ஜனநாயக செயற்பாட்டிற்கும், பாரிய எதிர்ப்புக் கிளம்பும் சூழல் கொழும்பில் காணப்படுவதற்கு அங்கு மாறியிருக்கும் அரசியலே காரணமாக இருக்கின்றது.<br /><br />இந்த எதிர்ப்புக் குழுவினரை நெறிப்படுத்தி, வழிநடத்த சிங்கள மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கைப் பெற்றிருக்கும், ஜே.வி.பி. சிஹெல உருமைய, பிக்குகள் சங்கம் .... போன்ற அமைப்புகளும், அவை சார்ந்த ஏனைய அமைப்புகளும் பின்னணியில் இருப்பதும் முக்கிய காரணம்.<br /><br />ஆனால் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையிலும் சமாதான விரும்பிகள் ‘யுத்தத்திற்கெதிரான போராட்டங்களில் ஈடுபடுவது மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம். இவ்வாறானவர்களின் பல வெளிநடவடிக்கைகளினால் தான் பல சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் தொடர்பாகவும், தமிழினப்பிரச்சனை தொடர்பாகவும் அவர்கள்அறியக்கூடியதாக இருக்கின்றது என்பதை பல தமிழர்களுக்கு தெரிவதில்லை. அவ்வாறு அவர்கள் அறியும்போது, தமிழர்கள் தொடர்பாக அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்த எண்ணக்கருத்தில் மாற்றம் நிகழ்வதற்கான சூழல் உருவாகும்.<br /><br />அதே போன்று கொழும்பிலோ அல்லது ஏனைய சிங்கள புறநகர் பகுதிகளிலோ ஒரு மனிதக் குண்டு வெடிப்பினால் அல்லது வேறு வகையான குண்டு வெடிப்பினால் பெருந்தொகையான சிங்கள பொதுமக்கள் பாதிக்கப்படும்போது, தமிழர் பிரதேங்களினல் எதிர்ப்புத் தெரிவித்த வரலாறு இருந்திருக்கின்றதா? அல்லது ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா? என்பதை நாம் நம்மைப்பார்த்து கேட்டவேண்டிய கேள்வி. அல்லது அவ்வாறான ஒரு ஏற்பாட்டை தமிழர்கள் செய்வதில்லை.<br /><br /><em><span style="color:#ff0000;">ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருந்து நாம் நிறையவே கற்றுக்கொள்ளவும், எம்மை மாற்றிக் கொள்ளவும் வேண்டியவர்களாக இருக்கின்றோம்.</span></em>Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-23137978.post-1156085144506079202006-08-20T10:32:00.000-04:002006-08-20T15:31:17.826-04:00போர்க் களத்தில் நடப்பது என்ன?இன்று இலங்கையின் நிலவரம் என்ன? என்றால் போர்க்ளத்தில் நிற்பவர்களைத் தவிர யாருக்கும் குறைந்த பட்ச உண்மை நிலை தெரியாது. புலிகளும், அரசபடைகளுக்கும் இடையில் எழுதுமட்டுவன் பகுதியில் உக்கிரமான சண்டை நடைபெறுகின்றது என்பது உண்மைதான். ஆனால் யுத்தம் புரிபவர்கள் சார்பாக பரஸ்பரம் வெளியிடும் இழப்புகளின் எண்ணிக்கைதான் மிக முரண்பாடான செய்தியாக இருக்கின்றன.<br /><br />இருசாராரின் எண்ணிக்கைகளையும் கூட்டிக் கழித்து நமது பொது அறிவைக்கொண்டு ஒரு முடிவிற்கு வருவதில் 80வீதமான உண்மையிருக்கும். போர் நடக்கும் சூழலில் இருசாராரும் இழப்புகளின் உண்மைநிலையை வெளியிடமாட்டார்கள். அது அவர்களின் போர்நடவடிக்கைகளைப்பாதிக்கும். அந்த வகையில் இன்றைய நிலையை ஆராய்ந்தால்,<br />உண்மையில் புலிகள் முகமாலையில் இருந்து எழுதுமட்டுவன் வரை சென்றுள்ளார்கள், கனிசமான இழப்புகளைச் சந்தித்துக்கொண்டு. அதே நேரம் இன்று வரை அவர்களால் மேல் நோக்கி நகரமுடியாதவாறு இரு பகுதியினரும் சண்பிடிக்கின்றார்கள். அரச இராணுவமும் என்ன விலை கொடுத்தாவது புலிகளை மேலும் முன்னேற விடாமல் உக்கிராமாக சண்டைபிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். புலிகளும் அவ்வாறே உக்கிரமான மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். <br /><br />யாழ் பலாலி விமானத்தளத்தைப் பொறுத்தவரை, புலிகளி;ன் தொடர்ச்;சியான ஆட்லெறி வீச்சினால் அதன் பல பகுதிகள் சேதமடைந்திருப்பதாக இராணுவமே ஒத்துக்கொண்டிருக்கின்றது. பலாலியை அண்டி வாழும் மக்களின் கருத்துக்களும் அதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. இது புலிகளைப் பொறுத்தவரை சாதகமான விடயம் தான். <br /><br />இது இவ்வாறிருக்க, யாழ்நிகரிலும், அதை அண்டிய பகுதிகளிலும் பல இளைஞர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதும், காணமல் போவதும் பரவலாக நடந்துகொண்டிருக்கின்றது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதால் இராணுவத்தினருக்கும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுததாரிகளுக்கும் நிறையவே தொர்பிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு இலங்கையில், இந்திய இராணுவத்தினர் இருந்த காலங்களில் முகமூடி அணிந்து, தலையாட்டிக் காட்டிக்கொடுத்த மாதிரி, தற்போது இலங்கை இராணுவத்தினரும் பரவலாக தலையாட்டியை வைத்து பல இளைஞர், யுவதிகளை கைது செய்துவருகிறார்கள். பொருட்களின் விலையும் திடீர் திடீர் என அதிகரித்திருப்பதாக அறிய முடிகின்றது. <br /><br />கடந்த வாரம் புலிகளின் தந்திரோபாய இராணுவ நடவடிக்கையாக, புலிகளின் ஒரு பிரிவினர் கடல் மார்க்கமாக பல வள்ளங்களில் கிளாலியூடாக சென்று தரையிறங்கி அரச இராணுவத்திற்கு எதிரான தாக்குதலை நடத்த மேற்கொண்ட திட்டம் வெற்றியளிக்காமல் கணிசமான போராளிகளை இழந்தும் அவர்களின் நடவடிக்கைகளை கைவிட்டு திரும்பிய சம்பவமும் நடைபெற்றது. இறந்த போராளிகளின் உடல்களை அரச இராணுவத்தினர் கைப்பற்றி இருந்தார்கள் என்பதும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. <br /><br />இதே போல் இராணுவத்தினர் தமது படைகளின் இறந்த, காயமடைந்த உடல்களை அப்புறப்படுத்துவதை தம்மால் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. <br /><br />எது எப்படியோ, கொழும்பிலும், நகரை அண்டிய பகுதிகளிலும் உள்ள பொது மருத்துவமனைகளில் காயமடைந்த இராணுவத்தினருக்காக முன்கூட்டியே இடங்களை ஒதுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-23137978.post-1156080567358156722006-08-20T09:29:00.000-04:002006-08-25T01:47:32.820-04:00நாசமறுப்பான்<a href="http://nasamaruppaan.blogspot.com/">நாசமறுப்பான்</a><a href="http://"></a>Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-23137978.post-1155613095377849052006-08-14T23:35:00.000-04:002006-08-15T17:29:00.936-04:00முல்லைப் படுகொலை யார் பொறுப்பு....?இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலுக்குள்ளான முல்லை, செஞ்சோலைக் கட்டிடத்தில் 61க்கும் ;அதிகமான மாணவிகள் கொலைசெய்யப்பட்டும் 129க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருக்கும் இச்செயலை எந்த மனித சமூகமும் கண்டிக்காமல் இருக்கமுடியாது. <br /><br />இவ்வாறான அசிங்கமான அடாவடித்தனத்தை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இலங்கை இராணுவத்தினரின், தமிழர்கள் மீதான தாக்குதல்கள் சொல்லில் அடங்காதவை. அதுவும் தற்போதைய ராஜபக்ஷ அரசானது தமிழர்கள் மீது மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளை விரிவு படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. <br /><br />ஆனால் இவ்வாறான மோசமான விளைவுகளுக்கு புலிப்படையினரும் முக்கிய காரணிகளில் ஒன்று என்றால் அதுவும் தவறில்லை. <br /><br />அண்மைக்காலமாக புலிப்டையினர்; தமது பிராந்தியங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு இராணுவப்பயிற்சிகளை பகிரங்கமாக வழங்கிவருகின்றனர். அதற்கு அவர்கள் ‘மக்கள் படை’ என்றும் பெயர் சூட்டியுள்ளார்கள். இம் மக்கள் படை, இலங்கை இராணுவத்தினரின் நடவடிக்கைகளில் இருந்து தங்களை தற்பாதுகாத்துக்கொள்வதற்காகவே இவ்வாறான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது என்று புலிகள் தரப்பில் சொல்லப்படுகின்றது.<br /><br />நேற்று செஞ்சோலையிலும் அவ்வாறான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகள் மீதே இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் புலிகள் இதை மறுக்கின்றார்கள். <br /><br />முல்லையில் இருந்து கிடைத்த பக்கசார்பற்ற தகவல்களின் படி அண்மைக்காலமாக இம் மாணவிகள் பயிற்சிக்கென்று சென்று வருவது வழக்கமான ஒன்று என்றும், இவ்வாறான பயிற்சிகளுக்கு செல்லாவிட்டால், உயர்தரப்பரீட்சை எழுத அனுமதிக்கப்பட மாடார்கள் என்ற ஒரு தகவலும் தெரியவந்துள்ளது. (புலிகள் மேல் வேணுமென்று பழிபோடும் நோக்கமல்ல) இந்த இடத்தில், ‘அங்கு கொல்லப்பட்டவர்கள் அருகில் ஆயுதங்கள் எதுவும் இல்லையே என்ற கேள்வி எல்லோருக்கும் பொதுவாக எழும்.’ அங்கு அன்று ஆயுதங்களுடனான பயிற்சி நடைபெறவில்லை. மாறாக அதற்கு முன்னேற்பாடன வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. <br /><br />புலிகளின் பகுதிகளில் இருந்து முறையாக ஒழுங்கமைக்கபட்ட தகவல் இராணுவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் விளைவே இந்த அநியாயப் படுகொலைகள். புலிகளின் பிராந்தியத்தில் இருந்து இராணுவத்தினருக்கு தகவல் போகுமளவிற்கு புலிகளின் அடைப்புகளில் ஓட்டை இருப்பதையே இது காட்டுகிறது. <br /><br />புலிகளைப் பொறுத்தவரையில் இவ்வாறான கொலைகளை புலிகள் தங்களுக்கு ஆதாயமாகவே பார்ப்பார்கள.; இது வரலாறு. மக்கள் இலகுவாக இராணுவமயப்படுத்தப்படுவதற்கு இவவாறனா சம்பவங்களே ஆயுதங்களாக இருக்கின்றன. <br /><br />தற்போதைக்கு, மாவிலாறு தண்ணீர்ப்பிரச்சினை எப்படியெல்லாம் அரசியலாக்கப்படுகின்றது!Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-23137978.post-1154290625258275182006-07-30T16:08:00.000-04:002006-07-30T16:17:20.886-04:00குமார் மூர்த்தியின் நினைவின் நிகழ்வு<a href="http://photos1.blogger.com/blogger/7167/2364/1600/kumar.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7167/2364/200/kumar.jpg" border="0" alt="" /></a>Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23137978.post-1153635227255256472006-07-23T02:11:00.001-04:002006-07-30T16:51:17.046-04:00தமிழனே தமிழனைக் கொல்லும் கறுப்பு ஜூலைஇந்த வாரம் கறுப்பு ஜூலை நினைவு கூரப்படுகிறது. யாழ்பாணம் தின்னைவேலியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ ரக் வண்டி புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி சின்னாபின்னமாகியதில் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இராணுவத்தினர் அப்பகுதியல் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்.<br /><br />கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்கள் இலங்கையின் தென்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட போது சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இனக்கலவரம் மூண்டது. தமிழர்கள் வகைதொகை இன்றி அடித்தும், வெட்டியும், கொல்லப்பட்டனர். பல தமிழர்கள் உயிருடன் எண்ணை ஊற்றித் தீ மூட்டிக் கொல்லப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள் சிங்களக் காடையர்களால் சூறையாடப்பட்டும், சிதைக்கப்பட்டும், தீயிட்டுக் கொழுத்தியும் தமது கோபத்தைத் தணிக்க முயன்றனர். இப்படி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நாடு ப+ராகவும் வன்முறை கட்டவித்து விடப்பட்டது. இதற்கு அன்று இலங்கையை ஆட்சி செய்த ஜெ.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசாங்கம் உறுதுணையாக இருந்தது.<br /><br />இதன் பின்னர் தமிழர்கள் அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். பின்னர் கட்டம் கட்டமாக கப்பல் மூலம் தமிழர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.<br /><br />இந்தக்காலப் பகுதியிலே வெலிக்கடைச் சிறையில் இருந்த குட்டி மணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட பல தமிழ்க் கைத்திகள் சக சிங்களக் கைதிகளால் வெட்டிக்கொல்லப்பட்டார்கள். இதுவே இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் கறைபடிந்தத கறுப்பு ஜூலை.<br />அன்று முதல் இன்று வரை இந்த கறுப்பு ஜூலையை தமிழர்கள் நினைவு கூருகின்றனர். அன்றைய வலியை இன்றும் எண்ணிப்பார்க்கின்றார்கள். அன்றைய இழப்புகளை இன்றும் புலம்புகிறார்கள். எத்தனை எத்தனை உயிர்கள், எவ்வளவு கோடி பெறுமதியான சொத்துக்கள். எல்லாம் எரிந்து சாம்பலாகிப்போனது. (சிங்களவர்கள் அனுபவித்ததை விட)<br />இந்த நிகழ்வுகள் நடந்து இன்று 23ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் ஈழத்தில் எந்தவொரு நல்ல மாற்றங்களும் நிகழ்நத மாதிரி இல்லை. இன்றும் இலங்கையில் இருந்து வரும் செய்திகளைப்பார்த்தால் கண்ணிவெடியில் சிக்கி இராணுவத்தினர் இறப்பதும் பின்னர் இராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்வதும் நாளாந்த நிகழ்வுகளாக இருக்கின்றன.<br /><br />இது ஒரு புறம் இருக்க, புலிகளும் கருணா அணியினரும் பரஸ்பரம் மாறி மாறி கொலை செய்வதும், புலிகளால் தடைசெய்யப்பட்ட ஏனை தமிழ் இயக்க அங்கத்தவர்களை புலிகள் கொல்லுவதும், இராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் தமிழ் துணைப்படையினர் புலிகளையும், அவர்கள் சார்ந்தவர்களை கொலை செய்வதும், பிழையான, தெளிவற்ற முடிவுகளினால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும், இராணுவத்திற்கு புலிகளால் வைக்கப்படும் கண்ணிவெடிகளில் பொதுமக்கள் கொல்லப்படுவதும், இன்று சர்வசாதாரணமாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.<br />வன்னியனின் புளக்கில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது நெருங்கிய சகாக்களின் சாவு பற்றியும் அவற்றுக்காக பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டது, தனது சகாக்களிடம் இருந்த போராட்ட உணர்வு, விடுதலை மீதுள்ள பற்று என்று அவர்கள் பற்றி எடுத்தியம்பியுள்ளார். அதேபோன்ற பல நூறு தமிழ்த்தாய்மார்கள் பெற்றெடுத்த புதல்வர்கள் சகபோராளிகள், தமிழர் விடுதலையே ஒரே குறியாகக்; கொண்டவர்கள் எத்தனை போர் பிரபாகரனின் ஆளனிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். எத்தனை மிதவாதத் தமிழ் அரசியல்வாதிகள் கொல்லப்பட்டிருக்கின்றார்;கள்? எல்லாவற்றிக்கும் கொலைதான் சரியான முடிவாக இருந்திருந்தால் தமிழருக்கு எப்போவோ பிரபாகரன் விடுதலை பெற்றுக் கொடுத்திருப்பார். ஆனால் இதை இன்று வரை அவர் உணராதிருப்பது தான் தமிழர்களுக்கு கிடைத்த துர்ப்பாக்கியம்.<br />தமிழர் விடுதலைப்போராட்டத்தில் பல இயக்கங்கள் முளைத்திருந்தன அவர்கள் எல்லோருக்கும் தமிழர் விடுதலையே கனவாக இருந்ததில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று நினைக்கின்றேன். ஆனால் வேறுபல உதிரிச்செயற்பாடுகளில் முரண்பட்ட கருத்துக்களுடன் இருப்பது இயற்கையே அது தவிர்க்கமுடியாது. ஆனால் அவற்றுக்கெல்லாம் உன்னத தீர்வு முரண்பட்டவர்களை கொலை செய்வது என்பது பிரபாகரனின் தீர்வாக இருப்பது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக இருக்கின்றது.<br /><br />ஒருவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார், காந்தியும் சுபாஸ்சந்திரபோசுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தன ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் அழிக்க வேண்டும் என்று எண்ணியதில்லை. இருவரும் தமது வேறுபாடுகளை உணர்ந்து செயற்பட்டார்கள்.<br /><br />புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு உரையாடலில் சொல்லிருக்கிறார் ‘தான் சுபாஸின் போராட்ட வரலாறு பற்றி பதிவு செய்யப்பட்ட புத்தகங்களை விரும்பி வாசிப்பதாக’. அவ்வாறு சொல்லும் பிரபாகரனால் எப்படி பிற்போக்குத் தனமான கொலைகளை செய்ய முடிகின்றது என்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒரு துன்பியல் நிகழ்வே.<br />கறுப்பு ஜூலையை நினைவு கூரும் நாம் இன்று என்ன நடக்கின்றது என்பதை பற்றி சிந்திப்பதை மறுந்து விடுகின்றோம். இன்று இலங்கையில் நடைபெறும் கொலைகள்; யாரால் யாருக்கு நடக்கின்றன? இலங்கை இராணுவத்தினால் கொல்லப்படும் தமிழர்க்ளை விட தமிழர்களால் தமிழர்கள் கொல்லப்படும் அவலம் தான் அதிகரித்திருப்பதை நாளாந்த செய்திகளில் காணக்கூடியதாக இருக்கின்றது.<br /><br />மாற்று இயக்கங்களையும், மாற்று கருத்துக்கொண்டவர்களையும் அழித்தொழிப்பது தான் புலிகளின் இலட்சியம் என்று இருப்பதை விட்டுவிட்டு தமிழர்களின் நியாயமான உரிமைக்காக போராடுவதை புலிகளும் ஏனைய தமிழ் இயக்கங்களும் கருத்தொருமைக்கு வராதவரை தமிழனே தமிழனை அழிப்பதில் சிங்களப்பேரினவாதிகளை விட முன்னணியில் நிற்பார்கள் என்பது நம்முன் இருக்கும் உண்மை.(<br /><br />).Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-23137978.post-1153596919736389162006-07-22T15:28:00.000-04:002006-07-24T21:13:26.166-04:00உப்புக் கலந்த சுவை இருக்கிறதே அது ஒரு அலாதிதான்....இன்று காலை சிறு தூறல்.... கொஞ்சம் குளிர்ச்சி..... அற்புதமான காலைப்பொழுது. காரணம் கடந்த வாரம் முழுக்க கனடாவில் வெயிலின் கொடுமை அப்பப்பா தாங்க முடியாது. அதுதான் என்னவோ வானை மறைத்த கருமேகங்களும், மழைத் தூறல்களும் என்னை இப்படி உணர வைத்திருக்கிறது.<br /><br />இன்று சனிக்கிழமை தொழிக்குப் போகவேண்டியதில்லை. நேற்று இரவு நண்பனின் வருகை, பக்கத்து உணவுச் சாலையில் இரண்டு முடா (பிச்சர்) அலைக்சாந்தர் கீற்ஸ் பீர்ரும், ‘சிக்கன் சுவலாக்கி’ இரவுச்சாப்பாடும் வயிறு முட்ட விழுங்கிப்போட்டு நாலு அரசியலை அலசிப்போட்டு வந்து படுத்தது தான்.<br /><br />கொழும்பில இருந்தபோது வழக்கமாக சனிக்கிழமைகளில் கடைக்குப்போய் பத்திரிகைகளை வாங்கி வந்து அம்மா போடுற லக்ஸ்பிறே மா தேத்தண்ணி தண்ணியையும் குடித்துக்கொண்டு செய்திகளையும், கட்டுரைகளையும் வாசிப்பது வழங்கம்.<br /><br />அதுபோன்ற ஒரு உணர்வில் பாலா கடை தோசையும் சாம்பாரும் இரண்டு உளுந்து வடையும் சாப்பிப்பிட்டுப் போட்டு பக்கத்து தமிழ் கடையில் இந்த வாரம் வந்த இலவச தமிழ்ப்பத்திரிகைகளோட மெல்லிய மழைத் தூறல்களில் நனைந்து கொண்டு வரும்போது, தூறல்கள் எல்லாம் சேர்ந்து சிறு துளிகளாக மாறி தலையில் இருந்து நெற்றியால் வழிந்து மூக்கு நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த மழைத் துளியை நாக்கினால் தட்டும்போது உப்புக் கலந்த சுவை இருக்கிறதே அது ஒரு அலாதிதான். (என்னென்று உப்புச் சுவை வந்தது என்று கேக்கக் கூடாது. இப்ப விஞ்ஞான விளக்கம் தர எனக்கு பொறுமையில்லை) தமிழில் ஒரு பழமொழி. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையில’. கனடாவில வெளிவரும் அனேகமான தமிழ் பத்திரிகைகளில உப்பு இருக்கோ இல்லையோ, குப்பையில போடவேண்டிய சமாச்சாரம் தான். ‘என்ன கொஞ்சமும் பொறுப்பில்லாமல் சொல்லுற மாதிரி சிலர் யோசிக்கலாம். உண்மைதான் நான் விளம்பரங்களைப் பற்றி கதைக்கவில்லை. மற்றவிடையங்களைப் பற்றித்தான் சொல்லுகிறேன்.’<br /><br /><span style="color:#ff6666;">கனடாவில இருந்து ‘முழக்கம்’ என்ற பத்திரிகை வெளிவருகின்றது. அதனுடைய எல்லாப்பக்கங்களின் உச்சியில ஒரு வாசகம் இருக்;கும். ‘புலிகளும் இந்நாள் இல்லையேல் எலிகளும் தின்னும் இத்தமிழர் இனத்தையே!’ ‘தேங்காச்சொட்டு, பற்பொடி, சவர்க்காரத்துண்டு’ லெவலுக்கு (மட்டம்) தமிழர் இனத்தை முழக்கம் கணிப்பிட்டிருப்பது மாதிரியே எனக்குப்படுகிறது. </span><br /><br />முழக்கத்தின் இரண்டாவது பக்கத்தில் ‘மக்கள் களம்’ என்று இருக்கின்றது. அதில் வாசகர்களின் கருத்துக்கள் கொஞ்சம் இருக்கும். (அதில் அனேகமானவை பத்திரிகை நடத்துபர்களே கருத்துக்களை எழுதுவது) அதற்குப் பக்கத்தில் பொன்னர், மன்னர் என்ற உரையாடல் பத்தியும் இருக்கும். சும்மா சொல்லக்கூடாது இந்தப் பத்தி குறிப்பிட்ட சிலருக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவது என்றால் அது கலப்படம் அற்ற உண்மை.<br />(இங்குள்ள தமிழ் பத்திரிகைகள் வியாபாரத்திற்காக எதை எல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்பதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்ல முயற்சிக்கிறேன்.)<br /><br />பார்ப்பணிய எதிர்ப்புவாதம், தமிழ்த்தேசியம், தூயதமிழ் சொற்றகள், தமிழ்நாட்டு திருமாவளவன் புலம்பல், பெரியாரியம்..... என்று அவ்வப்போது விளம்பரங்கள் போட்ட மிகுதிப்பக்கங்களில் போடுவது வழக்கம்.<br /><br />இம் முறை பொன்னர் மன்னர் பகுதியில், கடந்த வாரம் ‘வைகறை’ என்ற பத்திரிகையில் வெளிவந்த நிருபாவின் செவ்வியை (சுணைக்கிறது, அச்சாப்பிள்ளை ஆசிரியர்) அலசியிருந்தூர்கள். அதில் நிருபாவிடம் பெண் போராளிகள் பற்றிய கேள்வியில் அவர் சொல்லுகிறார்,<br />“பெண்புலிகளின் பெண்விடுதலை என்பது ஒரு மாயை என்றே எனக்குத் தோன்றுகின்றது போராட்டச் சூழலில் போராளி என்ற வகையில் ஒர பொதுத்தன்மை தான் இது. மற்றும்படி முடிவெடுக்கும் அதிகாரங்கள், தன்மைகள், தகமைகள் ஆண்களிடமே தேங்கிக்கிடக்கின்றது. போராட்டச் சூழல் நிறைவு பெறும் போது இவர்கள் மீண்டும் “அதே பெண்’ ஆகவே வீட்டுக்கு அனுப்படுவார்கள். இதே நிலையே இரண்டாம் உலகயுத்தத்தின் போது ஜெர்மனியிலும், மற்றும் பல நாடுகளிலும் நடந்திருக்கின்றது என்பது தான் வரலாறு.”<br /><br />நிருபாவின் இந்தக் கருத்திற்கு முழக்கத்தில் ‘விலாவாரியாக நல்கல்’ அடித்திருந்தார்கள்.<br /><br />பிறகு அடுத்தடுத்தடுத்த பக்கங்களை புரம்போது கடந்தவாரம் நிருபாவின் புத்தக வெளியீட்டுக்கான முழுப்பக்க விளம்பரம், வெளியீடு முடிந்த பிற்பாடும் இந்தப் பத்திரிகையில் வெளிவந்திருப்பதை பார்த்தபோது ஆகா... ஆகா.... நல்லாச் செய்யுறாங்கள். இது ஒரு ‘பிள்ளையார் சுழி’ மட்டும்தான்<br />இதெல்லாம் பார்த்த பிற்பாடு முழக்கத்திடம் நையாண்டியா ஒரு கேள்வி கேட்க வேணும் போல் இருந்தது.<br /><br />‘எலியிடம் இருந்து தமிழ் மக்களை புலி காப்பாற்றுகின்றது பிறது புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற யாரிடம் போவது இதையும் முழக்கம் நேரகாலத்தோட கண்டு வைப்பது நல்லது.<br /><br />பாவம் தமிழ் மக்கள்<br />குகையின் வாயிலில் நிற்கின்றார்கள்....Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-23137978.post-1148529170479681662006-05-24T23:36:00.000-04:002006-05-24T23:52:50.496-04:00அல்லைப்பிட்டியின் கதை....<em><span style="font-size:130%;color:#009900;">" வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனையையிட்டு அச்சமாயிருங்கள்! "<br />-அல் குர் ஆன்<br /></span></em><br />என்னைப் புதியவர்கள் சந்திக்கும் போது சிலர் "ஊரில எவ்விடம்?" எனக் கேட்பதுண்டு. நான் "அல்லைப்பிட்டி" என்பேன். அநேகமாக அவர்களில் பெரும்பாலானோருக்கு அல்லைப்பிட்டியைத் தெரிந்திருக்காது. அந்தச் சின்னஞ் சிறிய மணற் கிராமத்தின் பெயரைக் கடந்த சில தினங்களாகச் சர்வதேச ஊடகங்கள் விடாமல் உச்சரித்துக் கொண்டேயிருக்கின்றன. இணையத்தளங்களின் முகப்பில் என் கிராமத்தின் இரத்தம் வடிந்துகொண்டேயிருக்கிறது.யாழ் நிலப்பரப்பையும் லைடன் தீவையும் பண்ணைத் தாம்போதி இணைக்கிறது. பரவைக் கடலுக்குள்ளால் போடப்பட்ட இப் பாதை அண்ணளவாக மூன்றரைக் கிலோ மீற்றர்கள் நீளமுடையது. இத் தாம்போதியின் அந்தலையில் அல்லைப்பிட்டிக் கிராமம் ஆரம்பிக்கிறது. அல்லைப்பிட்டி வரண்ட பூமி. நன்னீர் சில குறிச்சிகளில் மட்டுமே கிடைக்கும். கிராமத்தின் பெரும் பகுதி மணற் திட்டிகளைக் கொண்டது. அல்லைப்பிட்டியின் மேற்குத் திசையில் மண்கும்பான் கிராமம் இருக்க, கிராமத்தின் மற்றைய மூன்று திசைகளையும் கடல் சூழ்ந்திருக்கும்.<br />யுத்தத்திற்கு முன்பாக அல்லைப்பிட்டியில் 220 குடும்பங்கள் வரையில் வாழ்ந்தார்கள்.1977 பொதுத்தேர்தலின் போது கிராமத்தின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் தொகை 940 ஆக இருந்தது. கிராமத்தில் சரி பாதித் தொகையினர் தலித்துக்கள். பதினைந்து குடும்பங்கள் முக்குவ சாதியினர். இரு முசுலீம் குடும்பங்கள் புலிகளால் துரத்தப்படும் வரை கிராமத்தின் ஓரமாக வயல் வெளிகளுக்குள் வசித்தார்கள். கிராமத்தின் மிகுதிப் பேர் வெள்ளாளர்கள்.<br /><br />வெள்ளாளக் குடியிருப்பையும் தலித்துக்களின் குடியிருப்புப் பகுதியையும் கிராமத்தின் ஒரேயொரு தார்ச்சாலை நிரந்தரமாகப் பிரித்து வைத்திருந்தது. தலித்துக்களின் குடியிருப்பில் ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில் அய்ந்தாம் வகுப்புவரை நடந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் மூடப்பட்டு விட்டது. வெள்ளாளக் குடியிருப்பில் "பராசக்தி வித்தியாலயம்" என்றொரு பாடசாலையுள்ளது. அங்கே பத்தாம் வகுப்புக்கள் வரை நடைபெறுகின்றன. அதற்கு மேல் படிக்கவேண்டுமெனில் வேலணைக்கோ அல்லது யாழ்ப்பாணத்திற்கோ தான் போகவேண்டும்.<br />கிராமத்தின் 90 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே வாழ்ந்தார்கள். தலித் மக்களின் தொழிலாகக் கள்ளிறக்குதலும் மீன்பிடியும் இருந்தன. வெள்ளாளர்கள் பெரும்பாலும் சிறு விவசாயிகளாகவோ மண் அள்ளும் கூலிகளாகவோ இருந்தார்கள். ஒரு பெயர் சொல்லக்கூடிய கல்வியாளரையோ, தொழில் முனைவரையோ தன்னும் தந்திராத சபிக்கப்பட்ட கிராமமது.<br /><br />அல்லைப்பிட்டிக்குள் 1978ல் தான் பேருந்து வந்தது (350 வழித்தடம்). 1981 ல் தான் அல்லைப்பிட்டிக்கு மின்சாரம் வந்தது. வறுமையிலும் அறியாமையிலும் உழன்றுகொண்டிருந்த அந்த மக்களிடையே 1984ல் முதலாவது வெடி விழுந்தது. மீனவரான அருமைநாயகம் கடற்கரையில் நின்றிருந்த போது சிறிலங்காப் படையினர் உலங்கு வானுர்தியிலிருந்து சுட்டனர். அருமைநாயகம் அவ்விடத்திலேயே மரணமானார். 1986ல் அல்லைப்பிட்டியில் சிறிலங்கா விமானம் குண்டு வீசியதில் ஞானமலர் அந்தோனி என்ற இளம்பெண் கொல்லப்பட்டார். இவை இரண்டும் வான்வழித் தாக்குதல்கள். சிறிலங்காப் படையினரின் கொலைப் பாதங்கள் 1990வரை அல்லைப்பிட்டி மண்ணிற் படவில்லை. முதன்முதலாகப் படையினரின் பாதங்கள் அங்கே பட்டபோது அவை என் கிராமத்து மனிதர்களின் உதிரச்சகதியில் நடந்தே வந்தன.<br /><br />1990 யூன் மாதம் யாழ் கோட்டையிலிருந்த பெருந்தொகையான இராணுவத்தினரும் பொலிஸாரும் விடுதலைப் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிக்கொண்டனர்.இக் கடுமையான முற்றுகை மாதக் கணக்கில் நீடித்தது. கோட்டைக்குள் சிக்கியிருந்த படையினருக்கு உணவோ, மருந்துகளோ, ஆயுதங்களோ வழங்க முடியாமல் சிறிலங்கா அரசு தவித்துக்கொண்டிருந்தது. கோட்டையைக் கைப்பற்றப் புலிகள் உக்கிரத்துடன் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். எக்கணத்திலும் கோட்டை புலிகளின் கைகளில் வீழ்ந்து விடலாம் என்ற நிலையில், ஓகஸ்ட் மாதம் 21ம் நாள் சிறிலங்கா அரசு பெருமளவு மீட்புப்படையினரை ஆகாய மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் லைடன் தீவில் தரையிறக்கம் செய்தது.<br />லைடன் தீவின் ஊறாத்துறையில் தரையிறக்கப்பட்ட மீட்புப் படையினர் கரம்பன், நாரந்தனை, சரவணை, வேலணை, சாட்டி, மண்கும்பான் வழியாக அல்லைப்பிட்டியை நோக்கி அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்க, லைடன் தீவில் நிலைகொண்டிருந்த புலிகள் பின்வாங்கிக் கொண்டிரு ந்தார்கள். மீட்புப் படையினர் அல்லைப்பிட்டியைக் கைப்பற்றிவிட்டால் பின் அவர்களுக்கும் கோட்டைக்கும் இடையில் மூன்றரைக் கிலோ மீற்றர்கள் நீளம் மட்டுமேயுள்ள -புலிகளின் ஆதிக்கமற்ற- ஆழங்குறைந்த பரவைக் கடற்பரப்பு மட்டுமேயிருக்கும்.<br /><br />வரும் வழியெல்லாம் பெரும் மனித சங்காரத்திலும் பாலியல் வல்லுறவுகளிலும் கொள்ளையிலும் தீவைப்பிலும் ஈடுபட்டுக்கொண்டே வந்த மீட்புப் படையினர் எதிர்ப்பேயின்றி 22ம் திகதி காலையில் அல்லைப்பிட்டியைக் கைப்பற்றினார்கள். தரைப்படையினருக்கு ஆதரவு வழங்குமுகமாக விமானப்படையினர் கிராமம் முழுவதும் குண்டு வீசிக்கொண்டிருக்கக் கடற் படையினர் கடல் மார்க்கமாகவும் அல்லைப்பிட்டியைச் சுற்றிவளைத்தனர். அப்போது அல்லைப்பிட்டியிலிருந்து அருகிலிருந்த மண்டைதீவுக்குப் பின்வாங்கிச் சென்ற முப்பதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிப் போராளிகள் மண்டைதீவுக் கடற்படுகையில் கூட்டாகச் சயனைட் அருந்தி இறந்தனர்.<br /><br />அல்லைப்பிட்டியைக் கைப்பற்றிய படையினர் முதற் காரியமாகப் பராசக்தி வித்தியாலயத்தைக் குண்டு வைத்துத் தரைமட்டமாக்கினார்கள்.படையினர் கண்ணில் அகப்பட்ட மனிதர்களையெல்லாம் சுட்டும் வெட்டியும் கொலை செய்தார்கள். சிறுமிகளையும் பெண்களையும் பாலியல் வதை செய்தார்கள். இப்போது போலவே அப்போதும் கிராம மக்கள் பிலிப்புநேரியார் ஆலயத்திலும், அங்கிருந்த பாதிரியார் நிக்கொலஸ் குருஸ் சந்திரபோஸிடமும் தஞ்சம் புகுந்தார்கள். ஆலயத்துக்குள் புகுந்த படையினர் அங்கு தஞ்சம் புகுந்திருந்த இளைஞர்களில் முப்பத்தைந்து அப்பாவிகளைக் கைது செய்து மண்டைதீவிற்கு கொண்டு சென்றனர். பின் அவர்களைக் கொன்று உடல்களை ஒரு கிணறுக்குள் ஒன்றாகப்போட்டு மண்ணால் நிரவினர். இந்த அரசபயங்கரவாத மனித சங்காரம் நிகழ்ந்துகொண்டிருந்த போது அப்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன அல்லைப்பிட்டிக்கு நேரிலேயே வந்திருந்து படையினரை உற்சாகமூட்டினார். மீட்புப் படையினருடன் வந்திருந்த EPDPயினரும் PLOTE உறுப்பினர்களும் கொலைகார அரச படைகளுக்கு வழிகாட்டிகளாகவும் ஆட்காட்டிகளாகவும் செயற்பட்டார்கள். அவர்கள், அல்லைப்பிட்டியின் இரத்தத்தில் தமது கைகளையும் நனைத்துக்கொண்டார்கள்.<br /><br />இறுதியில் மீட்பு படையினர் அல்லைப்பிட்டியிலிருந்தும், மண்டைதீவிலிருந்தும் கடல் மார்க்கமாகச் சென்று கோட்டை முற்றுகைக்குள் சிக்கியிருந்த படையினரை மீட்டுக்கொண்டு தீவாரின் பிணங்களுக்கு மேலால் அணிவகுத்து நடந்து "வெற்றிகரமாகத்" தளம் திரும்பினர்.<br /><br />1991ல் மீண்டும் அரச படையினர் அல்லைப்பிட்டியைக் கைப்பற்றினார்கள். இம்முறை அவர்கள் முழுத் தீவுப்பகுதியையுமே தமது பூரண கட்டப்பாட்டின் கீழே கொண்டு வந்தார்கள்.அப்போது யாழ் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. தீவுப்பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டதைக் குறித்துப் புலிகள் "தீவகம் முக்கியமற்ற நிலப்பரப்பு. தீவகத்தை இழந்தது எமக்கு ஒரு பொருட்படுத்தத்தக்க இழப்பேயல்ல." என ஒரு "புத்திசாலித்தனமான" புவியியல் அறிக்கையை விடுத்துத் தீவாரின் தலையில் தண்ணீர் தெளித்து விட்டார்கள்.<br /><br />ஆனால் இம்முறை படையினர் வெறும் அல்லைப்பிட்டியைத் தான் கைப்பற்றினார்கள். படையினர் வந்துகொண்டிருப்பதை அறிந்தவுடனேயே ஒட்டுமொத்தக் கிராம மக்களும் கிராமத்தை விட்டுக் கட்டிய துணிகளுடன் பண்ணைத் தாம்போதியால் நடந்தும், தோணிகள் மூலமும் யாழ் குடாநாட்டுக்குச் சென்றுவிட்டார்கள். பின் அய்ந்து வருடங்களாக அல்லைப்பிட்டியில் மக்களே இருக்கவில்லை. அங்கே கடற்படையினரும் EPDPயினரும் மட்டுமேயிருந்தார்கள்.<br /><br />1995-1996ல் யாழ் குடாநாடு மீண்டும் அரச படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து வன்னிக்கும் கொழும்புக்கும் வெளிநாடுகளிற்கும் இடம், புலம் பெயர்ந்தவர்கள் போக மிகுதிப்பேர் அல்லைப்பிட்டியில் மீளவும் குடியேறினார்கள். அவர்கள் தமது கிராமத்திற்குத் திரும்பியபோது கிராமத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் கடற்படையினர் நிலைகொண்டிருந்தனர். தீவகத்துள் நுழைவதற்கான படையினரின் பிரதான சோதனைச் சாவடி அல்லைப்பிட்டியிலேயே அமைக்கப்பட்டிருந்தது. கைகளுக்கும் கால்களுக்கும் இடையில் நித்தமும் "நேவி" திரிந்துகொண்டிருக்க, ஒரு பெரும் படைமுகாமையொத்த நிலப்பரப்பில் மக்கள் "வாழ" முற்பட்டனர்.<br />அப்போது பயிற்செய்கை நிலங்கள் காடுபற்றிக் கிடந்தன. மீன்பிடித் தோணிகள் காணாமற் போயிருந்தன. வீடுகள், பாடசாலைகள் எல்லாம் தரைமட்டமாகக் கிடந்தன. மக்கள் முதலிலிருந்து தமது வாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. அவர்கள் அரச நிவாரணப் பொருட்களிலேயே தங்கியிருந்தார்கள். மெல்ல மெல்லக் கிராமம் மறுபடியும் துளிர்த்தெழத் தொடங்கும் போது கடந்த 13.05.2006 அன்று அல்லைப்பிட்டியில் நான்கு மாதச் சிசுவிவிலிருந்து அறுபத்தொரு வயது முதியவர் வரையாக ஒன்பது அப்பாவிப் பொதுமக்கள் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.<br /><br />'இக் கொலைகளை EPDPயினரும் சேர்ந்தே செய்தார்கள்' எனச் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கிறது. அல்லைப்பிட்டி மக்களிடமிருந்து கிடைத்த நேரடித் தொலைபேசிச் செய்திகளும் இத் தகவலை உறுதி செய்கின்றன. EPDP இதை மறுத்திருக்கிறது. அவர்கள் செய்தார்களோ இல்லையோ, அரசபடைகளுடன் சேர்ந்தியங்கும், பேரினவாத அரசின் அமைச்சரவையில் பங்கெடுக்கும் EPDPயினரும் இக் கொலைகளுக்கான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.<br />விடுதலைப் புலிகளால் சமூக விரோதிகளென்றும் துரோகிகள் என்றும் குற்றஞ் சாட்டப்பட்டு மக்கள் கொல்லப்படும் போதும், புலிகள் உரிமை கோராமலேயே மாற்றுக் கருத்தாளர்களைக் கொன்றொழித்த போதும், புலிகள் அப்பாவி முசுலீம் மக்களையும் சிங்கள மக்களையும் படுகொலை செய்த போதும், அதை நியாயப்படுத்திக்கொண்டிருந்த புலிகளின் ஊடகங்களும் புலி ரசிகர்களும் அல்லைப்பிட்டிக் கொலைகளையிட்டு 'அறச்'சீற்றம் கொண்டார்கள். பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிக்கொண்டிருக்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இதற்கு நீதி விசாரணை வேண்டும் என்கிறார்கள். EPDP இறந்தவர்களையிட்டு வருத்தம் தெரிவிக்கிறது. கடற்படைத் தளபதியோ கடற்படையினர் இக் கொலைகளைச் செய்யவில்லை என மறுப்புத் தெரிவித்திருக்கிறார். புகலிடத்திலிருக்கும் கோயில் முதலாளி ஜெயதேவன் போன்ற திடீர் சனநாயகவாதிகள் "புலிகள் படையினரை ஆத்திரமூட்டுவதாலேயே இத்தகைய சம்பவங்கள் நிகழுகின்றன" என 'அரசியல் ஆய்வு' நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அல்லைப்பிட்டி மக்களோ அவலமும் துயரும் பெருக மறுபடியும் ஒரு முறை ஒட்டுமொத்தமாக அல்லைப்பிட்டியை விட்டு ஏதிலிகளாக வெளியேறிவிட்டார்கள்.<br /><br /><span style="font-size:130%;color:#ff0000;">II<br /></span>அல்லைப்பிட்டியின் கதை தான் கடந்த இருபத்தைந்து வருடங்களாகத் தமிழீழத்தின் அநேக கிராமங்களின் கதையாகவிருக்கிறது. இன்பம் -செல்வம் கொலையிலிருந்து வெலிகடச் சிறைப் படுகொலைகள் கொக்கட்டிச்சோலை, வந்தாறுமூலை, குமுதினி, நவாலி போன்ற எண்ணுக்கணக்கற்ற படுகொலைச் சம்பவங்களில் இதுவரை எந்தவொரு சம்பவத்துக்கும் நீதி வழங்கப்படவில்லை. இனப் படுகொலைக் குற்றவாளிகள் எவரும் இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை. பொதுமக்கள் மீதும் அகதிமுகாம்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், தேவாலயங்கள் மீதும் தாக்குதல்களை நிகழ்த்திவிட்டுப் 'புலிகளைத் தாக்கி அழித்தோம்' என்றே அரசு சொல்லி வந்தது, வருகிறது. இந்த அல்லைப்பிட்டிப் படுகொலைக்கும் யாரும் நீதி வழங்கிவிடப்போவதில்லை.<br /><br />சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் சிறிலங்கா அரசுகள் -அது அய்க்கிய தேசியக் கட்சியாக இருந்தாலென்ன சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலென்ன- தமிழின அழிப்பை முடுக்கிவிடுகிறார்கள். இந்த அடிப்படைக் காரணம்தான் ஒரு தொகை மக்களும் சர்வதேசத் தமிழ் உணர்வாளர்களும் கண்ணை மூடிக்கொண்டு முன்பு விடுதலை இயக்கங்களை ஆதரித்ததற்கும் இப்போது விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்கும் அடிப்படைக் காரணியாயாக அமைந்திருக்கிறது. தமது பொருளியல், வியாபாரம், பதவி போன்றவற்றுக்காகப் பஞ்சத்துக்குப் புலிகளை ஆதரிக்கும் ஒரு கூட்டத்தை விட்டுவிட்டால் மறுபுறத்தில் ஒரு தொகை இளைஞர்களும் மாணவர்களும் மக்களும் புலிகளை உண்மையிலேயே விசுவாசிக்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் புலிகளின் சனநாயக மறுப்பையும் பாஸிசச் செயற்பாடுகளையும் ஏற்க மறுத்தாற் கூட அவர்கள் சிறிலங்கா அரசின் பேரினவாதச் செயற்பாடுகள் ஊடாகப் 'புலிகள் ஆதரவு' என்ற நிலையை வந்தடைகிறார்கள்.அரச பயங்கரவாதத்திலிருந்து புலிகள் தமிழ் மக்களைப் பாதுகாப்பார்கள் என இவர்கள் உண்மையிலேயே நம்புகிறார்கள்.இவர்களின் விசுவாசமும் ஆதரவும் எவ்வளவுக்கு எவ்வளவு தூரம் உண்மையானதோ அவ்வளவுக்கு அவ்வளவு தூரம் முட்டாள்தனமானது. அரசியல் சமூக அறிவுபூர்வமற்றது.<br /><br />இன்று சர்வதேச அளவில் விடுதலைப் புலிகள் பெரும் கண்டனங்களைப் பெற்றுவருகிறார்கள்.எதிர்வரும் 29ம் திகதி அய்ரோப்பிய யூனியனும் புலிகளைத் தடை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதவுரிமைகளின் பெயராலும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயராலும்தான் மேற்கு நாடுகள் புலிகளைத் தடைசெய்கின்றன என்பது உண்மையாயின், 1983 இனப் படுகொலையின் போதோ, 1989ல் பிரேமதாஸ அரசு பல்லாயிரக்கணக்கான JVP உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொன்றொழிக்கும் போதோ இம் மேற்கு நாடுகள் சிறிலங்காவுடன் தமது இராஜரீக உறவுகளைத் துண்டித்திருக்க வேண்டும். தமது நாடுகளிலிருந்த சிறிலங்காத் தூதுவரகங்களை மூடியிருக்க வேண்டும். இலங்கை அரசு புலிகளைவிடப் பன்மடங்கு பயங்கரமானது. மேற்கு நாடுகள் கியூபா மீதும், ஈராக் மீதும் விதித்த தடைகள் மேற்கு நாடுகளின் மனித உரிமைகள் மீதான கரிசனையிலிருந்து பிறந்தவை எனச் சொன்னால் எந்த முட்டாளாவது நம்புவானா? புலிகளை இப்போதைக்கு மேற்கு நாடுகள் தடைசெய்வதிற்கு வேறு காரணங்கள் உள்ளன.<br /><br />இந்தக் காரணங்களைப் புரிந்து கொள்வதற்கு முதலில் மேற்கு நாடுகள்- இந்தியாவும் கூட- தமிழ் மக்களின் பிரச்சனைப்பாடுகளை மனித உரிமைகள், இறைமை, சமாதானம் போன்ற தார்மீகங்களால் அணுகாமல் ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியப் போட்டிகள், உலகமயமாக்குதல், உலக முதலாளியத்தின் வரலாற்று நெருக்கடி போன்றவற்றின் ஒரு பாகமாகத்தான் அணுகுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசுக்கும் புலிகளுக்கும் விதவிதமான அழுத்தங்களைக் கொடுத்து ஒவ்வொரு பலம் வாய்ந்த நாடும் முழு இலங்கையையும் தனது வல்லாண்மையின் கீழ் கொண்டுவரக் காய்களை நகர்த்துகின்றது. இதில் அய்ரோப்பிய யூனியன் கூட்டுக் கொள்ளையில் வேறு இறங்கியிருகிறது. கடந்த பெப்ரவரி மாதம் ஜெனிவாவிற்கு சமாதானப் பேச்சுவார்த்தைளுக்காகச் சென்றிருந்த அரசுத் தரப்பில் இடம் பெற்றிருந்த அமைச்ர் ரோஹித போகல்லாகம "வொய்ஸ் ஓப் அமெரிக்காவின்" முன்னாள் அதிகாரி என்பதுவும், கடந்த 15.05.2006 அன்று சிறிலங்கா நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக சிறிலங்காவுக்கு வந்திருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான முதன்மைப் பிரதிச் செயலர் டொனால்ட் காம்ப் "அய்ரோப்பிய யூனியன் புலிகளைத் தடைசெய்வதை அமெரிக்கா வரவேற்கும்." எனக் கூறிவிட்டுச் சொன்ன கையுடனேயே, தொழிலதிபர்களைச் சந்தித்து அமெரிக்க இலங்கை வர்த்தக உறவுகளைக் குறித்து விவாதித்துவிட்டுப் போயிருப்பதையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதே.<br /><br />விடுதலைப்புலிகள் ஓர் அதிபயங்கரமான அரசியல் முட்டுச்சந்துக்குள் சிக்கியிருக்கிறார்கள் என்பது அவர்களே உணர்ந்திருக்கும் ஓர் உண்மை. புலிகளின் இந்த வீழ்ச்சிக்குக் காரணங்களாகத் தேனி இணையத்தளமும், TBC வானொலியும் தமது மேட்டுக்குடி மதிப்பீடுகளால் சுட்டும் காரணங்களான, புலிகளின் தலைவர் படித்த எட்டாம் வகுப்போ, அன்ரன் பாலசிங்கம் அருந்தும் மதுவோ, சுப.தமிழ்ச்செல்வனுக்கு ஆங்கிலம் தெரியாததோ இருக்க முடியாது. புலிகளின் தனிமனிதப் பலவீனங்களிலிருந்து அல்லாமல் புலிகளின் வலதுசாரிக் குறுந்தேசியவாதப் பிற்போக்கு வேலைத்திட்டத்திலிருந்தே இந்த வீழ்ச்சி நேரிட்டது. அவர்கள் மக்களை வரி செலுத்தும், பவுண் வழங்கும், கப்பங் கட்டும் மந்தைகளாக மதிப்பிட்டார்களே தவிர, மக்களை அரசியற் சக்திகளாக மதிக்கவில்லை. அவர்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுச் சாகச நாயகர்களாகத் தம்மை நிறுத்திக்கொண்டார்கள். பிரபாகரன் குறித்த பிரமைகளையும் தனிமனிதத் துதியையும் கட்டியெழுப்புவதற்கு செலவு செய்த சக்தியில் இலட்சத்தில் ஒரு மடங்கைத் தன்னும் புலிகள் மக்களுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும், சமூக நீதியையும் சொல்லிக் கொடுப்பதற்கு செலவு செய்தார்களில்லை. தமது இயக்க உறுப்பினர்களுக்குப் புரட்சிகரக் கோட்பாடுகளைக் கடைப் பிடிப்பதற்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாகப் புலிகள் யாழ் இந்து மரபில் பேணக் கூடிய பிற்போக்குக் கோட்பாடுகளைக் கற்றுக்கொடுத்து அமைப்புக்குள் அதைக் கறாராகக் கடைப்பிடித்தார்கள் (பார்க்க: அன்ரன் பாலசிங்கம், நேர்காணல்:ஆனந்த விகடன் - 23.04.2006). வெறும் உணர்ச்சிக் கவிஞர்களையும் உலைக்களக் கவிஞர்களையும் பரப்புரையில் இறக்கிவிட்டு எமது இளைஞர்களினதும் மாணவர்களினதும் சிந்தனையை அரசியல் நீக்கம் செய்தார்கள். புலிகள் தமது முப்பது வருட வரலாற்றில் எப்போதாவது எங்காவது ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டத்தைப் போட்டது பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?<br />இன்னொரு புறத்தில் புலிகளை எதிர்பவர்களில் ஒரு சாராரும் புலிகளைத் தாண்டிய, ஏகாதிபத்திய அதிவிசுவாசிகளாக இருக்கிறார்கள்.அவர்கள் மேற்கு நாடுகளின் சனநாயக முகமூடிகளைக் காட்டி மக்களை அதை நம்பவும் சொல்கிறார்கள். TBC வானொலியில் இப்படி நிறைய முதிர் முட்டாள்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒருபோதும் TBC க்கும் ENDLFக்கும் சிறிலங்காப் பேரினவாத அரசுக்கும் உள்ள கள்ள உறவுகள் குறித்துக் கேள்விகளை எழுப்புவதில்லை. இவர்களின் திடீர்த் தலைவரான "சிவநெறிச் செல்வன்" ஜெயதேவன் அங்கம் வகிக்கும் பிரிட்டன் தொழிற்கட்சியின் ஈராக் நிலைப்பாடு பற்றித் திடீர்த் தலைவர் மறந்தும் வாய் திறப்பதில்லை. இந்தப் பன்னாடைகள் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்களாம். "அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?" என்ற பாரதிதாசனின் நக்கல் பாட்டொன்றுதான் ஞாபகத்தில் வருகிறது.<br /><br />இந்த நானாவித கொலைகாரர்களிடையே கொள்ளைக்காரர்களிடையே ஏமாற்றுக்காரர்களிடையே மக்கள் அல்லைப்பிட்டியைப் போல அநாதையாகக் கைவிடப்பட்டவர்களாக நிற்கிறார்கள். மக்களுக்கு நீதியையும் சமாதானத்தையும் ஒரு தேவதூதனோ அல்லது ஒரு பிசாசோ வானத்திலிருந்து கொண்டுவரப் போவதில்லை. இப்போது நடந்து கொண்டிருக்கும் யுத்தம் மக்களின் யுத்தமல்ல! இப்போது நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தையும் மக்களின் பேச்சுவார்த்தையல்ல! தங்கள் அரசியல் வழிகளையும், தேவைகளையும் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பேசும் உரிமையும், எழுதும் உரிமையும், கூட்டங் கூடும் உரிமையும், இயக்கம் நடத்தும் உரிமையும், கட்சி கட்டும் உரிமையும் அனைத்து ஈழத்தமிழ் மக்களுக்கும் வேண்டும். இந்த அடிப்படை மனித உரிமைகள் கூட மக்களிடமிருந்து அரசாலும் புலிகளாலும் பறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த உரிமைகளைப் பறிகொடுத்த உணர்வேயின்றி ஒடுக்கப்பட்ட மக்கள் இரத்தத்துள்ளும் அச்சத்துள்ளும் அறியாமையுள்ளும் புதைந்திருக்கிறார்கள்...அல்லைப்பிட்டியைப் போல. ஒடுக்குமுறையாளர்களே! வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனையையிட்டு அச்சமாயிருங்கள்!<br /><br /><strong><em>ஷோபாசக்தி<br />22.05.2006</em></strong><br /><strong><em></em></strong><br /><div align="right"><span style="font-size:85%;"><em>நன்றி: சத்தியக் கடசாசி</em></span></div>Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23137978.post-1146021950360896662006-04-25T22:56:00.001-04:002006-04-25T23:25:50.373-04:00கனடாத் தமிழரும் புலித்தடையும் 01<a href="http://photos1.blogger.com/blogger/7167/2364/1600/epdp.jpg"><img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7167/2364/320/epdp.jpg" border="0" /></a><br />இந்த மாதம் அதாவது சித்திரை 08ம் திகதி கனடாவில் விடுதலைப்புலிகள் இயத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாக கனேடிய அரசு தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. இதன் விளைவாக கனடாவில் இவ்வியக்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடையும் நிலைக்கு வந்துள்ளது.<br /><br />இதன் தொடர்ச்சியாக மொன்றில் மாகாணத்தில் உள்ள உலகத்தமிழர் காரியாலயம் கனேடிய பொலிசாரினால் சோதனையிடப் பட்டுள்ளது. அதன் பின்னர் நேற்று முன்தினம் இரவு ரொரண்டோவில் உள்ள உலகத்தமிழர் இயக்கத்தின் தலைமைக்காரியாலயம் ரொரண்டோ பொலிசாரினால் சோதனையிடப்பட்டு அக்கட்டிடத்தையும், அதற்குச் சொந்தமான நிலத்தையும் மச்சல் பட்டியால் சுற்றிக் கட்டிவைத்து, அங்கிருந்த ஆவணங்களையும், வேறுபொருட்களையும் பொலிசார் சோதனையிட்டதாக அதைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.<br /><br />கனடாத்தமிழர்களில் ஒரு சாரார் மத்தியில் இச் சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும், கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்திய அதே நேரம் இன்னொரு சாரார் மத்தியில் சந்தோசத்தையும், மனநிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளதையும் இங்கு உணரக்கூடியதாக இருந்தது.<br /><br />இதற்கான காரணத்தை பார்ப்போமாகயிருந்தால், இன்றைய ஒரு சூழலில் அதாவது புலிகளுக்கும், இலங்கை அரசிற்கும் இடையில் தற்போது ஏற்பட்டிருக்கும் யுத்த நிறுத்தம், (அது தற்போது வேறு விதமாக இருப்பது துரதிஷ்டம்) ஜெனிவாவில் நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட சமாதானப் பேச்சுவார்த்தை, இது போன்ற பல விடையங்கள் சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் அரங்கேறிக்கொண்டிருக்கும் இத் தருணத்திலா கனேடிய அரசு புலிகள் அமைபின் மீது இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? என்றும், இச்செயற்பாடானது கடும்போக்காளர்களை கூட்டுச்சேர்த்து ஆட்சி நடத்தும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவழிப்பதாக அமைவதால், மூன்று இலட்சத்திற்கும் அதிகமான கனேடியத் தமிழர்களின் உணர்வுகளை சிறிதேனும் கருத்தில் கொள்ளாது கனேடிய அரசு இவ்முடிவை எடுத்திருப்பது உலகத்தமிழர்களை வேதனை அடையச் செய்துள்ளது என்று அங்கலாய்கின்றனர்.<br /><br />மறு பிரிவினரோ, ‘இனிமேல் பணம் கேட்டு இவ்வமைப்பினர் சார்பிபல் யாரும் வரமாட்டார்கள் என்று நின்மதி அடைகின்றனர்.<br /><br />நாளாந்தம் தொழிச்சாலையிலும், உணவு விடுதிகளிலும் இயந்திரங்களோடு இயந்திரங்களாக உடலை வருத்தி, ஊரில் பட்ட கடனையும், வெளிநாடு வரக்கொடுத்த பணத்தையும் எப்படா கட்டி முடிப்பேன் என்று ஒவ்வொரு இரவினையும் நித்திரையின்றி தொலைத்துக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் கடைசி யுத்தத்திற்காக 2500 முதல் 10.000 வரை தரும் படி கேட்கும் இவர்களுக்கு நான் எதைக் கொடுப்பேன். என்று பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.<br /><br />‘நாங்களாக மனமுவந்து எங்களால் முடியுமான தொகையை இவர்களுக்கு கொடுப்பதில் எமக்கு எந்தக் கருத்து முரண்பாடும் இல்லை. ஆனால் எம்முடைய வருமானமோ வீட்டு வாடகைக்கு பணம் செலுத்த அல்லப்படும் போது எப்படி நாம் இவர்கள் கேட்கும் தொகையைக் கொடுப்பது? இருப்பவர்கள் விரும்பினால் கொடுக்கட்டும். அனால் இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது நியாயமாகப் படவில்லை.’ என்று இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர்.<br /><br />புலிகள் சார்ந்த அமைப்புகள், கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களிடத்தில் பணம் வசுலிப்பதையும், அதுவும் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நெருக்குவாரங்களைக் கொடுத்து ஒரு இக்கட்டான சூழலில் அவர்கள் பணம் வழங்குகின்றார்கள் என்பதை பல ஆதாரங்களுடனும், நீண்டகால புலனாய்வு அறிக்கைகள் ஊடாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், இவ்வாறான நடவடிக்கை கனேடிய அரசின் சட்டத்திற்கும், அதன் இறைமைக்கும் விரோதமான செயற்பாடாக அமைந்ததினாலேயே இவ்வரசு இம்முடிவை எடுப்பதற்கான காரணங்களில்; ஒன்று.<br /><br /><em><strong>புலிகளுடைய சட்டம் இலங்கையில், அவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கு தெரிந்திருக்கவில்லைப் போலும்! </strong></em>Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23137978.post-1145675913926569532006-04-21T23:07:00.001-04:002006-04-26T02:01:15.850-04:00தொடரும் வன்முறைகள் யாரைத் திருப்திப் படுத்த...<a href="http://photos1.blogger.com/blogger/7167/2364/1600/nasa01.0.jpg"><img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7167/2364/320/nasa01.0.jpg" border="0" /></a><br /><a href="http://photos1.blogger.com/blogger/7167/2364/1600/nasa01.jpg"></a><br />யாழ்மாவட்டம் புத்தூரில் ஐந்து இளைஞர்கள் சுடப்பட்டு அவர்கள் உடல்கள் இராணுவ முகாமில் இருந்து ஐந்நூறு யார் தொலைவில் கிடந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கொலைக்கு இராணுவத்தினரே முழுக்க முழுக்க சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று அவ்வ+ர் மக்களும், தமிழ் செய்தி ஊடகங்களும் தெரிவிக்கின்றன. ஆனால் இராணுவ தரப்பில் பேசவல்ல அதிகாரி இதை மறுத்துள்ளார்.<br /><br />இலங்கையில், அண்மைய அமைதி முயற்ச்சிக்குப்பின்னர் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைகள் இன்னும் பரவலாக்கப்பட்டு வருவதை இப் படுகொலைகள் மூலம் மேலும் அறியக்கூடியதாக உள்ளது.<br />இலங்கை இராணுவத்தினர், பொது மக்களிற்கு எரிச்சல் ஊட்டும் விதத்திலும், அல்லது அவர்கள் மீது வன்முறைகளை பிரயோகிப்பது போன்ற நடவடிக்கையால் மக்கள் படை என்னும் அமைப்பு இராணுவத்தினர் மீது ஆக்காங்கே கிளைமோர் கண்ணிவெடித்தாக்குதல்களை மேற்கொண்டுவருவதும், இதனால் மென்மேலும் இராணுவத்தினரின் அடாவடித்தனம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.<br />உண்மையில் இந்த மக்கள் படை என்பது யார் என்பது இன்னும் தெளிவுற அடையாளம் காணமுடியாத சூழலில் இவர்களுக்கு பின்னால் விடுதலைப்புலிகள் செயற்படுகின்றார்கள் என்பதை களநிலவரங்களில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது.<br /><br />அண்மைக்காலமாக புலிகளின் புதிய முயற்சியாக பொது மக்களுக்கு தற்பாதுகாப்பு பயிற்சி வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டு அவை மேலும் விரிவாக்கப்பட்டு பெரும்தொகையான மக்கள் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறிய செய்திகளை இணையத்தளச் செய்திகள் ஊடாக அறியக் கூடியதாக இருந்தது.<br /><br />புலிகளைப் பொறுத்தவரை தாங்கள் மட்டுமே இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடுத்துபவர்களாக அல்லது எதிரானவர்களாக காணப்படுவதை விட ஒட்டு மொத்த தமிழ் மக்களுகம் இராணுவத்திற்கும் இலங்கை அரசிற்கும் எதிரானவர்களாக வெளிக்காட்டப்படுவதையே புலிகள் மிகவும் விரும்புகிறார்கள். இதில் உள்நோக்கு அரசியல் புலிகளுக்கு இருப்பதைக் காணலாம்.<br /><br />ஆதாவது பலஸ்தீன போராட்டத்தை நாம் பார்போமாக இருந்தால் அங்கே இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் தமது கைகளுக்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு இஸ்ரேலிய இராணுவதிற்கு எதிராக போராட்டம் நடத்துவதை நாம் அன்றாடம் தொலைக்காட்சி செய்திகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. அதிநவீன இராணுவ கவசவண்டிக்கு முன்பாக சிறுவர் முதல் பெண்கள், முதியோர்கள் என்று பாரபட்சமின்றி கற்களை வீசி தமது எதிர்பினைக் காட்டுவார்கள். இதையே புலிகளும் தமிழ் மக்களிடம் எதிர்பாக்கின்றார்கள். அல்லது மக்களைத் தூண்டுகிறார்கள். இன்றைய சூழலில் இது ஒட்டுமொத்த தமிழ் மக்கள் போராட்டமாக சர்வதேசங்களுக்கு காட்ட வேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்துள்ளது.<br />ஈழப்போராட்டமானது தமிழ்மக்கள் போராட்டமாக 80பதுகளிலேயே பரவலாக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. அனால் எமது விடுதலைப்போராளிகள் அன்று அதைச் செய்ய தவறியதால், இன்று தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் இடையிலான இடைவெளியை மறுக்க முடியாது.<br /><br />தற்போதைய சூழலில் புலிகள், மக்கள் படையை வளர்தெடுக்க முயற்சிக்கும் அதே நேரம் சிங்கள தேசத்திலும் மக்கள் படைக்கெதிராக பேரினவாதிகள், அதாவது ‘காடையர்’கள் என்று தமிழ் சுழலில் பரவலாக அழைக்கப்படுகின்ற சிங்கள வன்முறையாளர்களை உருவாக்க சிறிதும் தயங்கமாட்டார்கள். இதன் வெளிப்பாட்டின் ஒரு வடிவமே அண்மையில் திருகோணமலையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற வன்முறையாகும்.<br /><br /><em><strong>ஆகவே இவ்வாறான வன்முறைகளை மென்மேலும் வளர்வதற்கான சூழலை உருவாக்குவதா? அல்லது இன்று சர்வதேச அரங்கில் தமிழர்களின் நியாயமான போராட்டங்கள் அரங்கேறியிருக்கும் தற்போதைய சூழலை மேலும் விரிவாக்க ஆக்கப+ர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதா என்பதை புலிகள் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா? </strong></em>Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-23137978.post-1145124745216608662006-04-15T14:02:00.001-04:002006-04-27T23:19:51.610-04:00நெஞ்சு நிமித்தல்.....<a href="http://photos1.blogger.com/blogger/7167/2364/1600/ltte.jpg"><img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7167/2364/320/ltte.jpg" border="0" /></a><br /><div align="left">சென்ற வாரம்; விடுதலைப் புலிகள் அமைப்பினை கனடா அரசாங்கம் தடைசெய்து, பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் புலிகளையும் சேர்த்துக்கொண்டுள்ள செய்தி யாரும் அறிந்ததே.<br /><br />புலிகளை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுவதற்காக கனடாவின் தற்போதைய கென்சவேட்டிவ் கட்சி அரசாங்கம் பல காலமாக அப்போது ஆட்சியில் இருந்த லிபரல் கட்சிக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தது.<br /><br />கனடாவில் 250.000க்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் புலிகள் ஆதரவாளர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சென்ற வருடம் ரொரண்டோவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கையும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்படத்தை தமது கைகளில் தாங்கியிருந்த மக்களின் உணர்ச்சி வெளிப்பாட்டினையும் பார்க்கும் போது அதை உணரக்கூடியதாக இருந்தது.<br /><br />புலிகளோடு மிகத் தொடர்புடைய உலகத்தமிழர் இயக்கமும், அதன் வெளியீடான “உலகத் தமிழர்” பத்திரிகையின் தலைமைக்காரியாலயமும் கனடாவில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. உலகத்தமிழர் இயக்கத்தின் கிளைப்பரிவினரே கனடாவில் விடுதலைப்புலிகளுக்காக பணம் வசூலிப்பவர்கள். இவர்கள் பணம் வசூலிக்க, தமிழர் வீட்டிற்கோ அல்லது தமிழர் நிறுவனங்களுக்கோ செல்லும் முன் அவர்கள் அல்லது அந்நிறுவன உரிமையாளர் தொடர்பான பலமான, பலவீனமான தகவல்களை திரட்டியும் அவர்களோடு எவ்வாறான கோணங்களில் கதைக்க வேண்டும் என்றும் முன்கூட்டியே திட்டமிட்டுச் செல்வதை அவர்களின் செயற்பாடுகளில் இருந்து உணரக்கூடியதாக இருக்கின்றது. பல இடங்களில் நட்புரீதியாகவும், நாகரீகமாகவும் பொதுமக்களுடன் நடந்து கொண்டதாகவும், சில இடங்களி;ல் அதிகாரத்துடனும், எரிச்சல் ஊட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடம் இருந்து அறியக் கூடியதாக இருந்தது.<br /><br />முழுவிருப்பத்துடன் பணம் வழங்கியவர்கள் ஒரு புறம் இருக்க அனேகமானவர்கள், தமக்கும் ஈழத்தில் வாழும் தமது நெருங்கிய உறவினர்கள் காரணமாகவும், ஈழத்தில் இருக்கும் தமது அசையா, அசையும் சொத்துக்கள் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட பயச்சூழலே அவர்களை பணம் வழங்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாக்கியது.<br /><br />அண்மையில் நண்பர் ஒருவரிடம் கதைத்தபோது அவர் சொன்னார். ‘தானும் புலிகளுக்கு 2500 கனேடிய டொலர்கள் கொடுத்ததாகவும், தனக்கு அப்பணம் கொடுக்கும் அளவிற்கு வசதிகள் இல்லை ஆனால் தனது உறவினர் ஒருவரின் திருமணம் ஈழத்தில் நடைபெற இருப்பதாலும் அதற்கு தான் கட்டாயம் செல்லவேண்டியிருப்பதால், இங்கு பணம் கொடுத்தால் தானே அங்கு பிரச்சனையில்லாமல் பேய்வர முடியும்? அதனால் கொடுத்தேன்’ என்று. (இப்போ அவர் “பின்நம்பர்”க்கு ஓடித்திரிகிறார்)<br /><br />புலிகளும், புலிகளைச் சார்ந்தவர்களும் தமது அதிகாரப்போக்கினை எல்லா மட்டங்களிலும் பிரயோகிப்பது, அவர்கள் தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் அறியாமையையே வெளிக்காட்டுகிறது. இது புலிகளுக்கு மட்டுமான ஒன்றல்ல மாறாக தமிழ் சமூக சூழலில் காணப்படுகின்ற ஒரு போக்கு இதை இன்னொரு வகையில் சொன்னால் ‘நெஞ்சு நிமித்தல்’.<br /><br />இந்த நெஞ்சு நிமித்தல் எல்லா சமயங்களிலும் கைகொடுக்காது இதை புலிகளும், அவர்கள் சார்ந்தவர்களும் உணரவேண்டும். உணரத் தவறியதன் ஒரு வெளிபாடே புலிகளை கனடாவில் தடைசெய்த காரணிகளில் ஒன்று என்பது கலப்படம் அற்ற உண்மை. </div>Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-23137978.post-1141096555742338332006-02-27T22:14:00.002-05:002006-02-27T22:15:55.743-05:00பறவைக் காய்ச்சல் அச்சம்:பறவைக் காய்ச்சல் நோய் அச்சத்தால் சிறிலங்காவின் 40 முக்கிய மருத்துவமனைகள் உசார்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.<br />சிறிலங்கா சுகாதார அமைச்சின் அதிகாரி பாபா பலிகவதன இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது:<br />இந்தியாவைத் தற்போது தாக்கியுள்ள பறவைக் காய்ச்சல் நோயானது சிறிலங்காவைத் தாக்கினால் முகம் கொடுப்பதற்காக மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.<br />கொழும்பு தேசிய வைத்தியசாலை யாழ்ப்பாணம் பொலன்னறுவ நுவரெலியா வவுனியா உள்ளிட்ட 40 மருத்துவமனைகளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.<br />தேவையான மருத்துவ உபகரணங்களும் மருந்துகளும் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இவை விரைவில் அந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.<br />இந்த நோயை முறியடிப்பதற்காக சீனாவின் ஹொங்கொங்கில் சிறிலங்கா குழுவினர் சிறப்புப் பயிற்சிகளை மெற்றுள்ளனர்.<br />கோழி சார் பொருட்களை உண்பதால் எதுவித ஆபத்தும் ஏற்படாது என்றார் அவர்.<br />முகப்பு மின்னஞ்சல் உங்கள் கருத்து அச்சுப் பிரதி <br />பிந்திய 8 செய்திகள் சிங்களவனுடன் சேரும் எவனும் நிச்சயமாக தமிழனுக்கு எதிரானவன் என்பது தென் தமிழீழக் குழந்தைக்கும் தெரியும்: இளந்திரையன் ஜெனீவாவில் சிங்களத்தின் ஒருமுகம் கிழிக்கப்பட்டு- அம்பலப்படுத்தப்பட்டுள்ளது: க.வே.பாலகுமாரன் தமிழீழ காவல்துறைக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தருவதா?: ஐ.தே.க. தொழிற்சங்கம் கண்டனம் தீவகப் பகுதியில் ஆயுததாரிகள் நடமாடுவது ஜெனீவா அறிக்கையை மீறுவதாகும்: விடுதலைப் புலிகள் திருகோணமலையில் புலிகள் பதுங்கு குழிகள் அமைப்பதாக இராணுவம் குற்றச்சாட்டு முத்தலிப் கொலை வழக்கு: சந்தேக நபர் வாக்குமூலம் அளிக்க அனுமதி முஸ்லிம் காங்கிரஸ் வேட்புமனு வழக்கு: நீதிபதி விலகல் 'சிறிலங்கா துறைமுக சபைத் தலைவரின் மாதாந்திர தொலைபேசி கட்டணம் ரூ. 2 இலட்சம்'Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23137978.post-1141095612814956182006-02-27T21:59:00.001-05:002006-09-17T04:50:30.410-04:00காதலைக் கட்டுப்படுத்துவது இதயமா/மூளையர்?<a href="http://photos1.blogger.com/blogger/904/1704/1600/Knocker.jpg"></a>காதலிக்காமல் இருப்பதைவிட, காதலித்து காதல் தோல்வி கண்டு, முதல் காதலையே நினைத்து நினைத்து உருகுவதும், கண்ணீர் வடிப்பதும் எவ்வளவோ சுகமானது என்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படியா?சட்டையை மாற்றுவது போல காதலிகளையும் ஏன் மனைவியையும் மாற்றும் மனிதர்களை நாம் பார்க்கிறோம் இல்லையா? ஆனால் பெருச்சாளிகள் அப்படியல்ல, PRIARIE VOLES என்ற இனத்தைச் சேர்ந்த பெருச்சாளிகளில் ஆண் பெருச்சாளிக்கு ஏகபத்தினிவிரதம் என்பதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் க்டுபிடித்துள்ளனர். இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று இந்த ஆண் பெருச்சாளி செல்வரம் தந்துவிடுகிறதாம். அது மட்டுமல்ல, இன்னொரு பெண் பெருச்சாளி யக்கும் பார்வையை வீசினால், ரூர்ப்பனகை மூக்கை இராமன் அறுத்தது போல, பாய்ந்து தாக்கி விரட்டிவிடுகிறதாம். ஆனால் ஒரு நிபந்தனை, தனது காதலியுடன் ஒருமுறையாவது உடலுறவு கொண்டிருக்க வேண்டும்.அமெரிக்காவின் புளோரிடா அரசுப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த PRIARIE VOLES இனப் பெருச்சாளிகளின் காதல் விவகாரத்தை விரிவாக ஆராய்ந்தார்கள். இந்த ஆண் பெருச்சாளி, பெண் பெருச்சாளியுடன் உடலுறவு கொள்ளும் போது, Dopamine என்ற ஒரு ரசாயனப்பொருள் அதனுடைய முளைக்குள் பெருமளவில் சுரகாகிறதாம். இந்த ரசாயனப் பொருள் தான் ஆயுள் முழுவதும் அழியாத காதல் பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறதாம்.இது உண்மைதான் என்று நிரூபிக்க முற்பட்டார் ஆய்வாளர் குழுவின் தலைவர் BRANDON ARAGONA, அவர் இந்த Dopamine ரசாயனப்பொருளை பெண்பெருச்சாளியுடன் உடலுறவு கொள்ளாத ஒரு பெண் பெருச்சாளியுன் உடம்பில் ஊசி மூலம் செலுத்தினார். அதன் பிறகு இந்த ஆண் பெருச்சாளிக்கு பெண்வாசனையே பிடிக்காமல் போய்விட்டது. பெண்பெருச்சாளிகளைக் கண்டால் ஓடி ஒதுங்க ஆரம்பித்தது.இது ஏதனால்?இந்த Dopamine ரசாயனப்பொருள், பெருச்சாளியின் மூளையில் உள்ள nucleus accumbens என்ற பகுதியை மாற்றியமைத்து விடுவிதது. இந்த மாற்றம் சாதாரண மாற்றமல்ல. அதிரடி மாற்றம். எப்படி என்றால், காதல் ஜோடியைப்பிரித்து, ஆண் பெருச்சாளிக்கு முன்னால் இன்னொரு பெண் பெருச்சாளியை நிறுத்திய போது, அதைக் கண்டதுமே ஆண் பெருச்சாளியின் மூளையில் Dopamine சுரந்தது. ஆனால், அது வேறு நரம்புச் சுற்று வழியாகத் திசைமாறிச் சென்று விட்டது. இதன் விளைவாக, புதிய பெண்ணை ஆண்பெருச்சாளி அலட்சியப்படுத்தி விட்டது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் Nature Neuroscience என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.சரி, மனிதர்களுக்கும் இப்படிப்பட்ட Dopamine ரசாயனப்பொருள் சுரக்குமானால், கற்பழிப்புக் குற்றங்களை இல்லாமல் போகுமல்லாவா?இதைப் பற்றியும் ஆராய்ந்திருக்கிறார் BRANDON ARAGONA. பெருச்சாளி போலத்தான் மனிதர்களுக்கும் மூளை அமைப்பு இருக்கிறதாம். ஆனால், ஒரேஒரு வித்தியாசம், மனித மூளைமாகப்பெரியது. அது, வெவ்வேறு நெருக்குதல்களுடன் இயங்குகிறது. அதனால் தான் காதலியைக் கைவிடுவது, மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணத்தில் மயங்குவது என்பது போன்ற சமூகக் கற்றங்கள் அதிகரிக்கின்றன.Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-23137978.post-1141095349592335972006-02-27T21:52:00.002-05:002006-02-27T21:55:49.593-05:00கத்தரிக்காய் குழம்பு!இன்று நான்கு நாட்களுக்கு முன்பு சமைத்த கத்தரிக்காய்க் குழம்பும் அதே நாள் அவித்த அரிசிமா பிட்டும் சாப்பிட நேர்ந்தது! என்ன ஆச்சரியமாக புருவங்களை உயர்த்திப் பார்க்கிறீங்களா? உண்மைதான் எனது குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த உணவு தான் அவை. இவற்றைச் சாப்பிடும் போது சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று நினைவிற்கு வந்தது அது தான் இங்கே எழுதவும் தூண்டினது. நானும் எனது நண்பரும் கனடாவில் உள்ள ஒரு வெதுப்பகத்திற்கு (பேக்கரி) வேலைக்குச் சென்று கொண்டிருந்த அந்த நாட்களில், காலையில் எழுந்து வேலைக்குச் செல்வது என்பது வார்த்தைகளால் எம்மைப்பொறுத்தவரை சொல்வது கடினம். கடும் பனிக் குளிர் காலங்களில் போர்வையால் இழுத்துப் போர்த்துக்கொண்டு படுக்குமால் போல் ஒரு அருமையான சந்தோஷசம்! அப்பாடா அதை அனுபவிச்சுப் பார்த்தா மட்மே அதன் முழுப் பரிமாணமும் புரியும். அந்த வெதுப்பகத்தில இந்தியப் பெண்கள், இலங்கைப் பெண்கள்(அக்காமார், தங்கச்சிமார்) அம்மாக்கள் எனப் பலரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். இந்த வெதுப்பகத்தில் மதிய உணவிற்காக எல்லோரையும் ஒரே நேரத்தில் போக விடமாட்டார்கள். இப்படியான சமயத்தில் நானும் நண்பரும் ஒருசேர போகவேண்டி வந்துவிட்டது. நண்பர் கொண்டு வரும் சாப்பாட்டில் தான் நான் பங்குபோடுவது வழமை. எனக்குச் சமைக்க சரியான சோம்பல். அதற்காக நண்பர் சமைக்கிறார் என்று நினையாதேங்கோ, அவருடைய துணையோடு சேர்ந்துதான் சமைக்கிறவர். சாப்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இரண்டுபேரும் சாப்பிடத் தொடங்கிய போது எமக்கு அருகில் உள்ள இன்னொரு மேசையில் சாப்பிடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஒரு தமிழ் அம்மாவோட பேச்சைக் கொடுத்தேன். ""எப்படி அம்மா? சாப்பிட வந்திருக்கிறீங்களா?""சாப்பிட மட்டும் வாய் திறக்க இருந்த அந்த அம்மாளு சாப்பிட்டாவோ இல்லையோ, நாங்கள் சாப்பிட்டு முடித்து எழும்ப மட்டும் தன்னுடைய வாயை மூடினமாதிரித் தெரியவில்லை.'என்னடா ராசாக்கள் இரண்டு பேரும் ஒரு பாசலில சாப்பிடுகிறீங்க? உங்களுக்கு இது காணாது பிள்ளையள், உங்கட வயசிற்கு எப்படிச் சாப்பிடவேண்டும் கண்டியலே" இந்தாங்கோ எனக்கு கூடிப்போச்சு. என்று சொல்லி மனுசி தன்னிடம் இருந்த கத்திரிக்காய்க் குழம்பில அரைவாசியையும், தேங்காய்ப் ப+ கலக்காத அரிசிமாப் பிட்டுவையும் எங்களுக்கு பரிமாறினா.எங்களுக்கு அவவிட்ட இருந்து சாப்பாட்டை வேண்டிச் சாப்பிட கஷ்;டமாக இருந்தது. ஏனென்றால் இந்த வயசில விடியற்காலையில எழும்பி சமைத்து நியாயமான தூரத்தில இருந்து வேலைக்கு வாறா, அவவிட்ட சாப்பாட்டைப் பங்கு போடுவதற்கு மனசு கேக்கவில்லை. மனுசி விட்டுதா எங்களை 'என்னடா தம்பிமாரே பார்த்துக்கொண்டு இருக்கிறீயள் சாப்பிடுங்கோ.. சாப்பிடுங்கோ என்று அடம்பிடிக்க நாங்களும் சாப்பிடத்தொடங்கினம். கொஞ்ச நேரம் கழிந்த பின்னர் "எப்படி இருக்கு என்னுடைய கத்தரிக்காக் குழம்பு? என்று வினவத்தொடங்கினா. நானும் மனுசி சந்தோஷப்படவேண்டும் என்பதற்காக நல்லா இருக்கம்மா, எப்படிச் சமைத்தனீங்க? என்று அவவின்ர தலையில ஐஸ் வைத்தபோது எனக்குப்பக்கத்தில இருந்தவன் தன்னுடைய சப்பாத்துக் காலால எனது கால் விரலை இறுக்கி மிதிக்கத் தொடங்கினான். அம்மா தொடங்கினா, ""ராசாக்கள் சாப்பிடும்போதே நான் நினைச்சனான் நல்ல ருசியா அனுபவிச்சுச் சாப்பிடுதுகள் யாரு பெத்த பிள்ளைகளோ இவ்வளவு ஆசையோட என்ர கறியச் சாப்பிடுதுகள் என்று."" ""முதலில கத்தரிக்காயை கீலம் கீலமா வெட்டிப்போட்டு நல்லா எண்ணையில பொரிக்க வேண்டும். பிறகு அந்த எண்ணைய புறப்பாக வடித்துப்போட்டு கறியைக் கூட்டி ஒரு அளவான சூட்டில சமைக்க வேண்டும். ஒரு நாளும் தம்பி தேங்காய்ப் பால் விடவே கூடாது. ஏனென்று இப்ப சொல்லுறன்.""'தேங்காய்ப்பால் விட்டால் கறி கெதியாகப் பழுதடைந்து போய்விடும்.' ""ஏன் அம்மா காலையில சமைத்து இப்ப சாப்பிடுவற்கிடையில தேங்காய்ப்பால் அவ்வளவு மோசமானதே? ......... அந்த அம்மா சிரிச்சுப்போட்டுச் சொன்னா ஒரு பதில்.............!!!!!!!!!இந்தக் கறி மூன்று கிழமைகளுக்கு முதல் சமைத்தது இப்ப மட்டும் எப்படி இருக்கு பார்த்தியலே...!!!நண்பருக்கு சாப்பிட்ட சாப்பாடு முழுவதும் தொண்டைக்கு மேலே வந்து நிற்பது போன்ற பிரமையோடு என்னை முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கும் அவன் மனுசிக்கு முன்னால் வாந்தி எடுத்திடுவானோ என்ற சந்தேகம்... நாள்பட நாள்பட சுவைதானம்மா..........என்று பாடவேணும் போல இருந்தது.Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.com0