Saturday, August 26, 2006

ஆயுதக் கொள்வனவு முயற்சியில் தமிழ் கனேடியர்கள் கைது!

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட விடுதலைப் புலிகளுக்கு பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பிரிவினரால் (F.B.I) கைது செய்யப்பட்ட எட்டு தமிழர்கள் அமெரிக்க நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு போர்த் தளபாட கொள்வனவில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. இராணுவ உபகரணங்கள் கொள்வனவு தொலைத் தொடர்பு மற்றும் வேறு தொழில்நுட்ப உபகரண கொள்வனவு, நிதி சேகரிப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களூடாக பணத்தை அனுப்பிவைத்தல், அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க முற்பட்டது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த சதாஜன் சரத்சந்திரன் (26), சகிலால் சபாரட்ணம் (27), திருத்தணிகன் தணிகாசலம் (37), நடராசா யோகராசா (52), முருகேசு விநாயகமூர்த்தி (57), விஜயசந்தர் பற்பானந்தன் (44), திருக்குமரன் சிவசுப்பிரமணியம் (27) இவர்களோடு தென்னிந்தியாவைச் சேர்ந்த நாச்சிமுத்து சோகிரட்டீஸ்( 54) ஆகியோரே கடந்த 19 ஆம் திகதி F.B.I பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்பது லட்சம் டொலர் முதல் 9 லட்சத்து 37,500 டொலர் வரை முதலில் இவர்கள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவிருந்ததாகவும், விமான எதிர்ப்பு ஏவுகணையில் ஒன்றைப் பரிசீலிப்பதற்காக எஸ்.ஏ- 18 ரக ஏவுகணை ஒன்றை இவர்களில் ஒருவர் ஓரிடத்திற்குக் கொண்டு சென்றதாகவும் தெரியவருகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் பலருக்கு விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளிருந்ததுடன் அமெரிக்க அதிகாரிகளுக்குப் பெருமளவு லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் புலிகளுக்கான தடையை நீக்கவும் முயற்சித்து வந்ததாகவும் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவித்துள்ளார். இவர்களது கைது சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளரிடம் கேட்டபோது, கைது செய்யப்பட்வர்களுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் நாம் செயற்படும் முறை இதுவல்ல என்றும் இப்படி ஒரு காரியத்தை நாம் ஒருபோதும் செய்தது கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சதாஜன் சரத்சந்திரன், சகிலால் சபாரட்ணம்இ திருத்தணிகன் தணிகாசலம் ஆகிய மூவரும் Waterloo பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்களாவர். சதாஜன் சரத்சந்திரன் கனேடிய தமிழ் மாணவர் அமைப்புக்கு (Canadian Tamil Students Association) சிலகாலம் தலைவராக இருந்ததுடன்இ 2004ம் ஆண்டு புரட்டாதி மாதம் ரொரன்ரோவில் நடாத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்சியின் ஏற்பாட்டாராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது பொங்கு தமிழ் நிகழ்வு தொடர்பாக இவரது பேட்டி வைகறை பத்திரிகையில் வெளியாகியது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இவர்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குமாகச் சேர்த்து அனைவருக்கும் 30 வருடங்களுக்கும் குறையாத தண்டனை வழங்கப்படுமெனவும் தெரியவருகிறது.

இந்த விவகாரத்தின் தொடர்சியாக மேலும் மூன்று தமிழ் கனேடிய இளைஞர்கள் ரொறன்ரோவில் RCMP பொலிசாரால் கைது செய்யப்படடுள்ளனர். Waterloo பல்கலைக்கழக மாணவரான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா (26) கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் இதே பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற பிரதீபன் நடராஜா (30) மற்றும் ரமணன் மயில்வாகணம் (29) ஆகியோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். ரமணன் மயில்வாகணம் University of Waterloo Tamil Students Associationன் உதவித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இவர்களை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கான விசாரணைக்காக பிரம்ரன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொலிசார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

இவர்களது கைது தொடர்பாக கனேடியன் தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் Puபாலபிள்ளை கருத்துத் தெரிவிக்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் தமிழ்சமூக அமைப்புகள் பலவற்றில் இணைந்து செயற்பட்டவர்கள் என்றும், எவரும இப்பாடியான அமைப்புக்களில் இணைந்து செயற்படமுடியும் என்றும், என்னைப் பொறுத்தவரையில் நான் உறுதியாக நம்புகின்றேன், அவர்கள் “Loose cannons..” (Dangerously uncontrollable people) போல் செயற்பட்டுள்ளார்கள் எனத்தெரிவித்துள்ளார்.
RCMP பொலிசார் இக் கைது நடவடிக்கை பற்றிக் குறிப்பிடுகையில் FBI யினரும் RCMP யினர் குறிப்பாக RCMP National security program and the Integrated National Security Enforcement Team (INSET) in Toronto மற்றும் அமெரிக்க சட்ட அமூலாக்கப் பிரிவினர் ஆகியோரின் ஒருங்கிணைக்கப்டட்ட நடவடிக்கையின் காரணமாக விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்ட பலர் மீது அமெரிக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

இக்கைதுகள் தொடர்பாக கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Stockwell Day நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில், மேற்படி கைதுகள்இ தகுந்த சமயத்தில்; தமது அரசு எடுத்த நடவடிக்கையினை பட்டவர்தனமாக வெளிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் கடந்த ஏப்பிரல் மாதம்இ எமது மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக விடுதலைப்புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்பது என்ற காததிரமான முடிவினை எடுத்தோம். மேற்படி கைதுகள் பயங்கரவாத அச்சம் தொடர்பான எமது அரசின் கடும் கண்காணிப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

நன்றி: வைகறை (25.08.2006)

No comments: