Tuesday, April 25, 2006

கனடாத் தமிழரும் புலித்தடையும் 01


இந்த மாதம் அதாவது சித்திரை 08ம் திகதி கனடாவில் விடுதலைப்புலிகள் இயத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாக கனேடிய அரசு தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. இதன் விளைவாக கனடாவில் இவ்வியக்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடையும் நிலைக்கு வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக மொன்றில் மாகாணத்தில் உள்ள உலகத்தமிழர் காரியாலயம் கனேடிய பொலிசாரினால் சோதனையிடப் பட்டுள்ளது. அதன் பின்னர் நேற்று முன்தினம் இரவு ரொரண்டோவில் உள்ள உலகத்தமிழர் இயக்கத்தின் தலைமைக்காரியாலயம் ரொரண்டோ பொலிசாரினால் சோதனையிடப்பட்டு அக்கட்டிடத்தையும், அதற்குச் சொந்தமான நிலத்தையும் மச்சல் பட்டியால் சுற்றிக் கட்டிவைத்து, அங்கிருந்த ஆவணங்களையும், வேறுபொருட்களையும் பொலிசார் சோதனையிட்டதாக அதைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கனடாத்தமிழர்களில் ஒரு சாரார் மத்தியில் இச் சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும், கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்திய அதே நேரம் இன்னொரு சாரார் மத்தியில் சந்தோசத்தையும், மனநிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளதையும் இங்கு உணரக்கூடியதாக இருந்தது.

இதற்கான காரணத்தை பார்ப்போமாகயிருந்தால், இன்றைய ஒரு சூழலில் அதாவது புலிகளுக்கும், இலங்கை அரசிற்கும் இடையில் தற்போது ஏற்பட்டிருக்கும் யுத்த நிறுத்தம், (அது தற்போது வேறு விதமாக இருப்பது துரதிஷ்டம்) ஜெனிவாவில் நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட சமாதானப் பேச்சுவார்த்தை, இது போன்ற பல விடையங்கள் சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் அரங்கேறிக்கொண்டிருக்கும் இத் தருணத்திலா கனேடிய அரசு புலிகள் அமைபின் மீது இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? என்றும், இச்செயற்பாடானது கடும்போக்காளர்களை கூட்டுச்சேர்த்து ஆட்சி நடத்தும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவழிப்பதாக அமைவதால், மூன்று இலட்சத்திற்கும் அதிகமான கனேடியத் தமிழர்களின் உணர்வுகளை சிறிதேனும் கருத்தில் கொள்ளாது கனேடிய அரசு இவ்முடிவை எடுத்திருப்பது உலகத்தமிழர்களை வேதனை அடையச் செய்துள்ளது என்று அங்கலாய்கின்றனர்.

மறு பிரிவினரோ, ‘இனிமேல் பணம் கேட்டு இவ்வமைப்பினர் சார்பிபல் யாரும் வரமாட்டார்கள் என்று நின்மதி அடைகின்றனர்.

நாளாந்தம் தொழிச்சாலையிலும், உணவு விடுதிகளிலும் இயந்திரங்களோடு இயந்திரங்களாக உடலை வருத்தி, ஊரில் பட்ட கடனையும், வெளிநாடு வரக்கொடுத்த பணத்தையும் எப்படா கட்டி முடிப்பேன் என்று ஒவ்வொரு இரவினையும் நித்திரையின்றி தொலைத்துக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் கடைசி யுத்தத்திற்காக 2500 முதல் 10.000 வரை தரும் படி கேட்கும் இவர்களுக்கு நான் எதைக் கொடுப்பேன். என்று பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

‘நாங்களாக மனமுவந்து எங்களால் முடியுமான தொகையை இவர்களுக்கு கொடுப்பதில் எமக்கு எந்தக் கருத்து முரண்பாடும் இல்லை. ஆனால் எம்முடைய வருமானமோ வீட்டு வாடகைக்கு பணம் செலுத்த அல்லப்படும் போது எப்படி நாம் இவர்கள் கேட்கும் தொகையைக் கொடுப்பது? இருப்பவர்கள் விரும்பினால் கொடுக்கட்டும். அனால் இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது நியாயமாகப் படவில்லை.’ என்று இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர்.

புலிகள் சார்ந்த அமைப்புகள், கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களிடத்தில் பணம் வசுலிப்பதையும், அதுவும் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நெருக்குவாரங்களைக் கொடுத்து ஒரு இக்கட்டான சூழலில் அவர்கள் பணம் வழங்குகின்றார்கள் என்பதை பல ஆதாரங்களுடனும், நீண்டகால புலனாய்வு அறிக்கைகள் ஊடாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், இவ்வாறான நடவடிக்கை கனேடிய அரசின் சட்டத்திற்கும், அதன் இறைமைக்கும் விரோதமான செயற்பாடாக அமைந்ததினாலேயே இவ்வரசு இம்முடிவை எடுப்பதற்கான காரணங்களில்; ஒன்று.

புலிகளுடைய சட்டம் இலங்கையில், அவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கு தெரிந்திருக்கவில்லைப் போலும்!

No comments: