இந்த வாரம் கறுப்பு ஜூலை நினைவு கூரப்படுகிறது. யாழ்பாணம் தின்னைவேலியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ ரக் வண்டி புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி சின்னாபின்னமாகியதில் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இராணுவத்தினர் அப்பகுதியல் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்.
கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்கள் இலங்கையின் தென்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட போது சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இனக்கலவரம் மூண்டது. தமிழர்கள் வகைதொகை இன்றி அடித்தும், வெட்டியும், கொல்லப்பட்டனர். பல தமிழர்கள் உயிருடன் எண்ணை ஊற்றித் தீ மூட்டிக் கொல்லப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள் சிங்களக் காடையர்களால் சூறையாடப்பட்டும், சிதைக்கப்பட்டும், தீயிட்டுக் கொழுத்தியும் தமது கோபத்தைத் தணிக்க முயன்றனர். இப்படி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நாடு ப+ராகவும் வன்முறை கட்டவித்து விடப்பட்டது. இதற்கு அன்று இலங்கையை ஆட்சி செய்த ஜெ.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசாங்கம் உறுதுணையாக இருந்தது.
இதன் பின்னர் தமிழர்கள் அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். பின்னர் கட்டம் கட்டமாக கப்பல் மூலம் தமிழர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இந்தக்காலப் பகுதியிலே வெலிக்கடைச் சிறையில் இருந்த குட்டி மணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட பல தமிழ்க் கைத்திகள் சக சிங்களக் கைதிகளால் வெட்டிக்கொல்லப்பட்டார்கள். இதுவே இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் கறைபடிந்தத கறுப்பு ஜூலை.
அன்று முதல் இன்று வரை இந்த கறுப்பு ஜூலையை தமிழர்கள் நினைவு கூருகின்றனர். அன்றைய வலியை இன்றும் எண்ணிப்பார்க்கின்றார்கள். அன்றைய இழப்புகளை இன்றும் புலம்புகிறார்கள். எத்தனை எத்தனை உயிர்கள், எவ்வளவு கோடி பெறுமதியான சொத்துக்கள். எல்லாம் எரிந்து சாம்பலாகிப்போனது. (சிங்களவர்கள் அனுபவித்ததை விட)
இந்த நிகழ்வுகள் நடந்து இன்று 23ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் ஈழத்தில் எந்தவொரு நல்ல மாற்றங்களும் நிகழ்நத மாதிரி இல்லை. இன்றும் இலங்கையில் இருந்து வரும் செய்திகளைப்பார்த்தால் கண்ணிவெடியில் சிக்கி இராணுவத்தினர் இறப்பதும் பின்னர் இராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்வதும் நாளாந்த நிகழ்வுகளாக இருக்கின்றன.
இது ஒரு புறம் இருக்க, புலிகளும் கருணா அணியினரும் பரஸ்பரம் மாறி மாறி கொலை செய்வதும், புலிகளால் தடைசெய்யப்பட்ட ஏனை தமிழ் இயக்க அங்கத்தவர்களை புலிகள் கொல்லுவதும், இராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் தமிழ் துணைப்படையினர் புலிகளையும், அவர்கள் சார்ந்தவர்களை கொலை செய்வதும், பிழையான, தெளிவற்ற முடிவுகளினால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும், இராணுவத்திற்கு புலிகளால் வைக்கப்படும் கண்ணிவெடிகளில் பொதுமக்கள் கொல்லப்படுவதும், இன்று சர்வசாதாரணமாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
வன்னியனின் புளக்கில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது நெருங்கிய சகாக்களின் சாவு பற்றியும் அவற்றுக்காக பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டது, தனது சகாக்களிடம் இருந்த போராட்ட உணர்வு, விடுதலை மீதுள்ள பற்று என்று அவர்கள் பற்றி எடுத்தியம்பியுள்ளார். அதேபோன்ற பல நூறு தமிழ்த்தாய்மார்கள் பெற்றெடுத்த புதல்வர்கள் சகபோராளிகள், தமிழர் விடுதலையே ஒரே குறியாகக்; கொண்டவர்கள் எத்தனை போர் பிரபாகரனின் ஆளனிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். எத்தனை மிதவாதத் தமிழ் அரசியல்வாதிகள் கொல்லப்பட்டிருக்கின்றார்;கள்? எல்லாவற்றிக்கும் கொலைதான் சரியான முடிவாக இருந்திருந்தால் தமிழருக்கு எப்போவோ பிரபாகரன் விடுதலை பெற்றுக் கொடுத்திருப்பார். ஆனால் இதை இன்று வரை அவர் உணராதிருப்பது தான் தமிழர்களுக்கு கிடைத்த துர்ப்பாக்கியம்.
தமிழர் விடுதலைப்போராட்டத்தில் பல இயக்கங்கள் முளைத்திருந்தன அவர்கள் எல்லோருக்கும் தமிழர் விடுதலையே கனவாக இருந்ததில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று நினைக்கின்றேன். ஆனால் வேறுபல உதிரிச்செயற்பாடுகளில் முரண்பட்ட கருத்துக்களுடன் இருப்பது இயற்கையே அது தவிர்க்கமுடியாது. ஆனால் அவற்றுக்கெல்லாம் உன்னத தீர்வு முரண்பட்டவர்களை கொலை செய்வது என்பது பிரபாகரனின் தீர்வாக இருப்பது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக இருக்கின்றது.
ஒருவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார், காந்தியும் சுபாஸ்சந்திரபோசுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தன ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் அழிக்க வேண்டும் என்று எண்ணியதில்லை. இருவரும் தமது வேறுபாடுகளை உணர்ந்து செயற்பட்டார்கள்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு உரையாடலில் சொல்லிருக்கிறார் ‘தான் சுபாஸின் போராட்ட வரலாறு பற்றி பதிவு செய்யப்பட்ட புத்தகங்களை விரும்பி வாசிப்பதாக’. அவ்வாறு சொல்லும் பிரபாகரனால் எப்படி பிற்போக்குத் தனமான கொலைகளை செய்ய முடிகின்றது என்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒரு துன்பியல் நிகழ்வே.
கறுப்பு ஜூலையை நினைவு கூரும் நாம் இன்று என்ன நடக்கின்றது என்பதை பற்றி சிந்திப்பதை மறுந்து விடுகின்றோம். இன்று இலங்கையில் நடைபெறும் கொலைகள்; யாரால் யாருக்கு நடக்கின்றன? இலங்கை இராணுவத்தினால் கொல்லப்படும் தமிழர்க்ளை விட தமிழர்களால் தமிழர்கள் கொல்லப்படும் அவலம் தான் அதிகரித்திருப்பதை நாளாந்த செய்திகளில் காணக்கூடியதாக இருக்கின்றது.
மாற்று இயக்கங்களையும், மாற்று கருத்துக்கொண்டவர்களையும் அழித்தொழிப்பது தான் புலிகளின் இலட்சியம் என்று இருப்பதை விட்டுவிட்டு தமிழர்களின் நியாயமான உரிமைக்காக போராடுவதை புலிகளும் ஏனைய தமிழ் இயக்கங்களும் கருத்தொருமைக்கு வராதவரை தமிழனே தமிழனை அழிப்பதில் சிங்களப்பேரினவாதிகளை விட முன்னணியில் நிற்பார்கள் என்பது நம்முன் இருக்கும் உண்மை.(
).
Sunday, July 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ommda nee kadee kudukerathai veeeda maaidathuu onuumm moosama illai
Hey buddy,
do u know what is going on in the world?
அதான் அண்ணா இவங்கள் அண்டைக்கு நடந்த கொலைக்கு இப்ப நினைவு கூருராங்க. இப்ப இவங்களால (தமிழனால தமிழனுக்கு) நடக்கிற கொலைகளுக்கு எப்பவாம் நினைவு கூருரப்போராங்க?
கனேடியன்
குதர்க்கமாக எழுதுறதே உன் தொழிலாகப் போச்சு.
கனேடியன்
குதர்க்கமாக எழுதுறதே உன் தொழிலாகப் போச்சு.
useless man. dirty pig
Post a Comment