Tuesday, April 25, 2006

கனடாத் தமிழரும் புலித்தடையும் 01


இந்த மாதம் அதாவது சித்திரை 08ம் திகதி கனடாவில் விடுதலைப்புலிகள் இயத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாக கனேடிய அரசு தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. இதன் விளைவாக கனடாவில் இவ்வியக்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடையும் நிலைக்கு வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக மொன்றில் மாகாணத்தில் உள்ள உலகத்தமிழர் காரியாலயம் கனேடிய பொலிசாரினால் சோதனையிடப் பட்டுள்ளது. அதன் பின்னர் நேற்று முன்தினம் இரவு ரொரண்டோவில் உள்ள உலகத்தமிழர் இயக்கத்தின் தலைமைக்காரியாலயம் ரொரண்டோ பொலிசாரினால் சோதனையிடப்பட்டு அக்கட்டிடத்தையும், அதற்குச் சொந்தமான நிலத்தையும் மச்சல் பட்டியால் சுற்றிக் கட்டிவைத்து, அங்கிருந்த ஆவணங்களையும், வேறுபொருட்களையும் பொலிசார் சோதனையிட்டதாக அதைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கனடாத்தமிழர்களில் ஒரு சாரார் மத்தியில் இச் சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும், கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்திய அதே நேரம் இன்னொரு சாரார் மத்தியில் சந்தோசத்தையும், மனநிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளதையும் இங்கு உணரக்கூடியதாக இருந்தது.

இதற்கான காரணத்தை பார்ப்போமாகயிருந்தால், இன்றைய ஒரு சூழலில் அதாவது புலிகளுக்கும், இலங்கை அரசிற்கும் இடையில் தற்போது ஏற்பட்டிருக்கும் யுத்த நிறுத்தம், (அது தற்போது வேறு விதமாக இருப்பது துரதிஷ்டம்) ஜெனிவாவில் நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட சமாதானப் பேச்சுவார்த்தை, இது போன்ற பல விடையங்கள் சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் அரங்கேறிக்கொண்டிருக்கும் இத் தருணத்திலா கனேடிய அரசு புலிகள் அமைபின் மீது இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? என்றும், இச்செயற்பாடானது கடும்போக்காளர்களை கூட்டுச்சேர்த்து ஆட்சி நடத்தும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவழிப்பதாக அமைவதால், மூன்று இலட்சத்திற்கும் அதிகமான கனேடியத் தமிழர்களின் உணர்வுகளை சிறிதேனும் கருத்தில் கொள்ளாது கனேடிய அரசு இவ்முடிவை எடுத்திருப்பது உலகத்தமிழர்களை வேதனை அடையச் செய்துள்ளது என்று அங்கலாய்கின்றனர்.

மறு பிரிவினரோ, ‘இனிமேல் பணம் கேட்டு இவ்வமைப்பினர் சார்பிபல் யாரும் வரமாட்டார்கள் என்று நின்மதி அடைகின்றனர்.

நாளாந்தம் தொழிச்சாலையிலும், உணவு விடுதிகளிலும் இயந்திரங்களோடு இயந்திரங்களாக உடலை வருத்தி, ஊரில் பட்ட கடனையும், வெளிநாடு வரக்கொடுத்த பணத்தையும் எப்படா கட்டி முடிப்பேன் என்று ஒவ்வொரு இரவினையும் நித்திரையின்றி தொலைத்துக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் கடைசி யுத்தத்திற்காக 2500 முதல் 10.000 வரை தரும் படி கேட்கும் இவர்களுக்கு நான் எதைக் கொடுப்பேன். என்று பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

‘நாங்களாக மனமுவந்து எங்களால் முடியுமான தொகையை இவர்களுக்கு கொடுப்பதில் எமக்கு எந்தக் கருத்து முரண்பாடும் இல்லை. ஆனால் எம்முடைய வருமானமோ வீட்டு வாடகைக்கு பணம் செலுத்த அல்லப்படும் போது எப்படி நாம் இவர்கள் கேட்கும் தொகையைக் கொடுப்பது? இருப்பவர்கள் விரும்பினால் கொடுக்கட்டும். அனால் இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது நியாயமாகப் படவில்லை.’ என்று இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர்.

புலிகள் சார்ந்த அமைப்புகள், கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களிடத்தில் பணம் வசுலிப்பதையும், அதுவும் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நெருக்குவாரங்களைக் கொடுத்து ஒரு இக்கட்டான சூழலில் அவர்கள் பணம் வழங்குகின்றார்கள் என்பதை பல ஆதாரங்களுடனும், நீண்டகால புலனாய்வு அறிக்கைகள் ஊடாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், இவ்வாறான நடவடிக்கை கனேடிய அரசின் சட்டத்திற்கும், அதன் இறைமைக்கும் விரோதமான செயற்பாடாக அமைந்ததினாலேயே இவ்வரசு இம்முடிவை எடுப்பதற்கான காரணங்களில்; ஒன்று.

புலிகளுடைய சட்டம் இலங்கையில், அவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கு தெரிந்திருக்கவில்லைப் போலும்!

Friday, April 21, 2006

தொடரும் வன்முறைகள் யாரைத் திருப்திப் படுத்த...



யாழ்மாவட்டம் புத்தூரில் ஐந்து இளைஞர்கள் சுடப்பட்டு அவர்கள் உடல்கள் இராணுவ முகாமில் இருந்து ஐந்நூறு யார் தொலைவில் கிடந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கொலைக்கு இராணுவத்தினரே முழுக்க முழுக்க சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று அவ்வ+ர் மக்களும், தமிழ் செய்தி ஊடகங்களும் தெரிவிக்கின்றன. ஆனால் இராணுவ தரப்பில் பேசவல்ல அதிகாரி இதை மறுத்துள்ளார்.

இலங்கையில், அண்மைய அமைதி முயற்ச்சிக்குப்பின்னர் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைகள் இன்னும் பரவலாக்கப்பட்டு வருவதை இப் படுகொலைகள் மூலம் மேலும் அறியக்கூடியதாக உள்ளது.
இலங்கை இராணுவத்தினர், பொது மக்களிற்கு எரிச்சல் ஊட்டும் விதத்திலும், அல்லது அவர்கள் மீது வன்முறைகளை பிரயோகிப்பது போன்ற நடவடிக்கையால் மக்கள் படை என்னும் அமைப்பு இராணுவத்தினர் மீது ஆக்காங்கே கிளைமோர் கண்ணிவெடித்தாக்குதல்களை மேற்கொண்டுவருவதும், இதனால் மென்மேலும் இராணுவத்தினரின் அடாவடித்தனம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.
உண்மையில் இந்த மக்கள் படை என்பது யார் என்பது இன்னும் தெளிவுற அடையாளம் காணமுடியாத சூழலில் இவர்களுக்கு பின்னால் விடுதலைப்புலிகள் செயற்படுகின்றார்கள் என்பதை களநிலவரங்களில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது.

அண்மைக்காலமாக புலிகளின் புதிய முயற்சியாக பொது மக்களுக்கு தற்பாதுகாப்பு பயிற்சி வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டு அவை மேலும் விரிவாக்கப்பட்டு பெரும்தொகையான மக்கள் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறிய செய்திகளை இணையத்தளச் செய்திகள் ஊடாக அறியக் கூடியதாக இருந்தது.

புலிகளைப் பொறுத்தவரை தாங்கள் மட்டுமே இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடுத்துபவர்களாக அல்லது எதிரானவர்களாக காணப்படுவதை விட ஒட்டு மொத்த தமிழ் மக்களுகம் இராணுவத்திற்கும் இலங்கை அரசிற்கும் எதிரானவர்களாக வெளிக்காட்டப்படுவதையே புலிகள் மிகவும் விரும்புகிறார்கள். இதில் உள்நோக்கு அரசியல் புலிகளுக்கு இருப்பதைக் காணலாம்.

ஆதாவது பலஸ்தீன போராட்டத்தை நாம் பார்போமாக இருந்தால் அங்கே இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் தமது கைகளுக்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு இஸ்ரேலிய இராணுவதிற்கு எதிராக போராட்டம் நடத்துவதை நாம் அன்றாடம் தொலைக்காட்சி செய்திகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. அதிநவீன இராணுவ கவசவண்டிக்கு முன்பாக சிறுவர் முதல் பெண்கள், முதியோர்கள் என்று பாரபட்சமின்றி கற்களை வீசி தமது எதிர்பினைக் காட்டுவார்கள். இதையே புலிகளும் தமிழ் மக்களிடம் எதிர்பாக்கின்றார்கள். அல்லது மக்களைத் தூண்டுகிறார்கள். இன்றைய சூழலில் இது ஒட்டுமொத்த தமிழ் மக்கள் போராட்டமாக சர்வதேசங்களுக்கு காட்ட வேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்துள்ளது.
ஈழப்போராட்டமானது தமிழ்மக்கள் போராட்டமாக 80பதுகளிலேயே பரவலாக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. அனால் எமது விடுதலைப்போராளிகள் அன்று அதைச் செய்ய தவறியதால், இன்று தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் இடையிலான இடைவெளியை மறுக்க முடியாது.

தற்போதைய சூழலில் புலிகள், மக்கள் படையை வளர்தெடுக்க முயற்சிக்கும் அதே நேரம் சிங்கள தேசத்திலும் மக்கள் படைக்கெதிராக பேரினவாதிகள், அதாவது ‘காடையர்’கள் என்று தமிழ் சுழலில் பரவலாக அழைக்கப்படுகின்ற சிங்கள வன்முறையாளர்களை உருவாக்க சிறிதும் தயங்கமாட்டார்கள். இதன் வெளிப்பாட்டின் ஒரு வடிவமே அண்மையில் திருகோணமலையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற வன்முறையாகும்.

ஆகவே இவ்வாறான வன்முறைகளை மென்மேலும் வளர்வதற்கான சூழலை உருவாக்குவதா? அல்லது இன்று சர்வதேச அரங்கில் தமிழர்களின் நியாயமான போராட்டங்கள் அரங்கேறியிருக்கும் தற்போதைய சூழலை மேலும் விரிவாக்க ஆக்கப+ர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதா என்பதை புலிகள் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா?

Saturday, April 15, 2006

நெஞ்சு நிமித்தல்.....


சென்ற வாரம்; விடுதலைப் புலிகள் அமைப்பினை கனடா அரசாங்கம் தடைசெய்து, பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் புலிகளையும் சேர்த்துக்கொண்டுள்ள செய்தி யாரும் அறிந்ததே.

புலிகளை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுவதற்காக கனடாவின் தற்போதைய கென்சவேட்டிவ் கட்சி அரசாங்கம் பல காலமாக அப்போது ஆட்சியில் இருந்த லிபரல் கட்சிக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தது.

கனடாவில் 250.000க்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் புலிகள் ஆதரவாளர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சென்ற வருடம் ரொரண்டோவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கையும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்படத்தை தமது கைகளில் தாங்கியிருந்த மக்களின் உணர்ச்சி வெளிப்பாட்டினையும் பார்க்கும் போது அதை உணரக்கூடியதாக இருந்தது.

புலிகளோடு மிகத் தொடர்புடைய உலகத்தமிழர் இயக்கமும், அதன் வெளியீடான “உலகத் தமிழர்” பத்திரிகையின் தலைமைக்காரியாலயமும் கனடாவில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. உலகத்தமிழர் இயக்கத்தின் கிளைப்பரிவினரே கனடாவில் விடுதலைப்புலிகளுக்காக பணம் வசூலிப்பவர்கள். இவர்கள் பணம் வசூலிக்க, தமிழர் வீட்டிற்கோ அல்லது தமிழர் நிறுவனங்களுக்கோ செல்லும் முன் அவர்கள் அல்லது அந்நிறுவன உரிமையாளர் தொடர்பான பலமான, பலவீனமான தகவல்களை திரட்டியும் அவர்களோடு எவ்வாறான கோணங்களில் கதைக்க வேண்டும் என்றும் முன்கூட்டியே திட்டமிட்டுச் செல்வதை அவர்களின் செயற்பாடுகளில் இருந்து உணரக்கூடியதாக இருக்கின்றது. பல இடங்களில் நட்புரீதியாகவும், நாகரீகமாகவும் பொதுமக்களுடன் நடந்து கொண்டதாகவும், சில இடங்களி;ல் அதிகாரத்துடனும், எரிச்சல் ஊட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடம் இருந்து அறியக் கூடியதாக இருந்தது.

முழுவிருப்பத்துடன் பணம் வழங்கியவர்கள் ஒரு புறம் இருக்க அனேகமானவர்கள், தமக்கும் ஈழத்தில் வாழும் தமது நெருங்கிய உறவினர்கள் காரணமாகவும், ஈழத்தில் இருக்கும் தமது அசையா, அசையும் சொத்துக்கள் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட பயச்சூழலே அவர்களை பணம் வழங்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாக்கியது.

அண்மையில் நண்பர் ஒருவரிடம் கதைத்தபோது அவர் சொன்னார். ‘தானும் புலிகளுக்கு 2500 கனேடிய டொலர்கள் கொடுத்ததாகவும், தனக்கு அப்பணம் கொடுக்கும் அளவிற்கு வசதிகள் இல்லை ஆனால் தனது உறவினர் ஒருவரின் திருமணம் ஈழத்தில் நடைபெற இருப்பதாலும் அதற்கு தான் கட்டாயம் செல்லவேண்டியிருப்பதால், இங்கு பணம் கொடுத்தால் தானே அங்கு பிரச்சனையில்லாமல் பேய்வர முடியும்? அதனால் கொடுத்தேன்’ என்று. (இப்போ அவர் “பின்நம்பர்”க்கு ஓடித்திரிகிறார்)

புலிகளும், புலிகளைச் சார்ந்தவர்களும் தமது அதிகாரப்போக்கினை எல்லா மட்டங்களிலும் பிரயோகிப்பது, அவர்கள் தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் அறியாமையையே வெளிக்காட்டுகிறது. இது புலிகளுக்கு மட்டுமான ஒன்றல்ல மாறாக தமிழ் சமூக சூழலில் காணப்படுகின்ற ஒரு போக்கு இதை இன்னொரு வகையில் சொன்னால் ‘நெஞ்சு நிமித்தல்’.

இந்த நெஞ்சு நிமித்தல் எல்லா சமயங்களிலும் கைகொடுக்காது இதை புலிகளும், அவர்கள் சார்ந்தவர்களும் உணரவேண்டும். உணரத் தவறியதன் ஒரு வெளிபாடே புலிகளை கனடாவில் தடைசெய்த காரணிகளில் ஒன்று என்பது கலப்படம் அற்ற உண்மை.

Monday, February 27, 2006

பறவைக் காய்ச்சல் அச்சம்:

பறவைக் காய்ச்சல் நோய் அச்சத்தால் சிறிலங்காவின் 40 முக்கிய மருத்துவமனைகள் உசார்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா சுகாதார அமைச்சின் அதிகாரி பாபா பலிகவதன இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவைத் தற்போது தாக்கியுள்ள பறவைக் காய்ச்சல் நோயானது சிறிலங்காவைத் தாக்கினால் முகம் கொடுப்பதற்காக மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
கொழும்பு தேசிய வைத்தியசாலை யாழ்ப்பாணம் பொலன்னறுவ நுவரெலியா வவுனியா உள்ளிட்ட 40 மருத்துவமனைகளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேவையான மருத்துவ உபகரணங்களும் மருந்துகளும் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இவை விரைவில் அந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த நோயை முறியடிப்பதற்காக சீனாவின் ஹொங்கொங்கில் சிறிலங்கா குழுவினர் சிறப்புப் பயிற்சிகளை மெற்றுள்ளனர்.
கோழி சார் பொருட்களை உண்பதால் எதுவித ஆபத்தும் ஏற்படாது என்றார் அவர்.
முகப்பு மின்னஞ்சல் உங்கள் கருத்து அச்சுப் பிரதி
பிந்திய 8 செய்திகள் சிங்களவனுடன் சேரும் எவனும் நிச்சயமாக தமிழனுக்கு எதிரானவன் என்பது தென் தமிழீழக் குழந்தைக்கும் தெரியும்: இளந்திரையன் ஜெனீவாவில் சிங்களத்தின் ஒருமுகம் கிழிக்கப்பட்டு- அம்பலப்படுத்தப்பட்டுள்ளது: க.வே.பாலகுமாரன் தமிழீழ காவல்துறைக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தருவதா?: ஐ.தே.க. தொழிற்சங்கம் கண்டனம் தீவகப் பகுதியில் ஆயுததாரிகள் நடமாடுவது ஜெனீவா அறிக்கையை மீறுவதாகும்: விடுதலைப் புலிகள் திருகோணமலையில் புலிகள் பதுங்கு குழிகள் அமைப்பதாக இராணுவம் குற்றச்சாட்டு முத்தலிப் கொலை வழக்கு: சந்தேக நபர் வாக்குமூலம் அளிக்க அனுமதி முஸ்லிம் காங்கிரஸ் வேட்புமனு வழக்கு: நீதிபதி விலகல் 'சிறிலங்கா துறைமுக சபைத் தலைவரின் மாதாந்திர தொலைபேசி கட்டணம் ரூ. 2 இலட்சம்'

காதலைக் கட்டுப்படுத்துவது இதயமா/மூளையர்?

காதலிக்காமல் இருப்பதைவிட, காதலித்து காதல் தோல்வி கண்டு, முதல் காதலையே நினைத்து நினைத்து உருகுவதும், கண்ணீர் வடிப்பதும் எவ்வளவோ சுகமானது என்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படியா?சட்டையை மாற்றுவது போல காதலிகளையும் ஏன் மனைவியையும் மாற்றும் மனிதர்களை நாம் பார்க்கிறோம் இல்லையா? ஆனால் பெருச்சாளிகள் அப்படியல்ல, PRIARIE VOLES என்ற இனத்தைச் சேர்ந்த பெருச்சாளிகளில் ஆண் பெருச்சாளிக்கு ஏகபத்தினிவிரதம் என்பதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் க்டுபிடித்துள்ளனர். இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று இந்த ஆண் பெருச்சாளி செல்வரம் தந்துவிடுகிறதாம். அது மட்டுமல்ல, இன்னொரு பெண் பெருச்சாளி யக்கும் பார்வையை வீசினால், ரூர்ப்பனகை மூக்கை இராமன் அறுத்தது போல, பாய்ந்து தாக்கி விரட்டிவிடுகிறதாம். ஆனால் ஒரு நிபந்தனை, தனது காதலியுடன் ஒருமுறையாவது உடலுறவு கொண்டிருக்க வேண்டும்.அமெரிக்காவின் புளோரிடா அரசுப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த PRIARIE VOLES இனப் பெருச்சாளிகளின் காதல் விவகாரத்தை விரிவாக ஆராய்ந்தார்கள். இந்த ஆண் பெருச்சாளி, பெண் பெருச்சாளியுடன் உடலுறவு கொள்ளும் போது, Dopamine என்ற ஒரு ரசாயனப்பொருள் அதனுடைய முளைக்குள் பெருமளவில் சுரகாகிறதாம். இந்த ரசாயனப் பொருள் தான் ஆயுள் முழுவதும் அழியாத காதல் பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறதாம்.இது உண்மைதான் என்று நிரூபிக்க முற்பட்டார் ஆய்வாளர் குழுவின் தலைவர் BRANDON ARAGONA, அவர் இந்த Dopamine ரசாயனப்பொருளை பெண்பெருச்சாளியுடன் உடலுறவு கொள்ளாத ஒரு பெண் பெருச்சாளியுன் உடம்பில் ஊசி மூலம் செலுத்தினார். அதன் பிறகு இந்த ஆண் பெருச்சாளிக்கு பெண்வாசனையே பிடிக்காமல் போய்விட்டது. பெண்பெருச்சாளிகளைக் கண்டால் ஓடி ஒதுங்க ஆரம்பித்தது.இது ஏதனால்?இந்த Dopamine ரசாயனப்பொருள், பெருச்சாளியின் மூளையில் உள்ள nucleus accumbens என்ற பகுதியை மாற்றியமைத்து விடுவிதது. இந்த மாற்றம் சாதாரண மாற்றமல்ல. அதிரடி மாற்றம். எப்படி என்றால், காதல் ஜோடியைப்பிரித்து, ஆண் பெருச்சாளிக்கு முன்னால் இன்னொரு பெண் பெருச்சாளியை நிறுத்திய போது, அதைக் கண்டதுமே ஆண் பெருச்சாளியின் மூளையில் Dopamine சுரந்தது. ஆனால், அது வேறு நரம்புச் சுற்று வழியாகத் திசைமாறிச் சென்று விட்டது. இதன் விளைவாக, புதிய பெண்ணை ஆண்பெருச்சாளி அலட்சியப்படுத்தி விட்டது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் Nature Neuroscience என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.சரி, மனிதர்களுக்கும் இப்படிப்பட்ட Dopamine ரசாயனப்பொருள் சுரக்குமானால், கற்பழிப்புக் குற்றங்களை இல்லாமல் போகுமல்லாவா?இதைப் பற்றியும் ஆராய்ந்திருக்கிறார் BRANDON ARAGONA. பெருச்சாளி போலத்தான் மனிதர்களுக்கும் மூளை அமைப்பு இருக்கிறதாம். ஆனால், ஒரேஒரு வித்தியாசம், மனித மூளைமாகப்பெரியது. அது, வெவ்வேறு நெருக்குதல்களுடன் இயங்குகிறது. அதனால் தான் காதலியைக் கைவிடுவது, மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணத்தில் மயங்குவது என்பது போன்ற சமூகக் கற்றங்கள் அதிகரிக்கின்றன.

கத்தரிக்காய் குழம்பு!

இன்று நான்கு நாட்களுக்கு முன்பு சமைத்த கத்தரிக்காய்க் குழம்பும் அதே நாள் அவித்த அரிசிமா பிட்டும் சாப்பிட நேர்ந்தது! என்ன ஆச்சரியமாக புருவங்களை உயர்த்திப் பார்க்கிறீங்களா? உண்மைதான் எனது குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த உணவு தான் அவை. இவற்றைச் சாப்பிடும் போது சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று நினைவிற்கு வந்தது அது தான் இங்கே எழுதவும் தூண்டினது. நானும் எனது நண்பரும் கனடாவில் உள்ள ஒரு வெதுப்பகத்திற்கு (பேக்கரி) வேலைக்குச் சென்று கொண்டிருந்த அந்த நாட்களில், காலையில் எழுந்து வேலைக்குச் செல்வது என்பது வார்த்தைகளால் எம்மைப்பொறுத்தவரை சொல்வது கடினம். கடும் பனிக் குளிர் காலங்களில் போர்வையால் இழுத்துப் போர்த்துக்கொண்டு படுக்குமால் போல் ஒரு அருமையான சந்தோஷசம்! அப்பாடா அதை அனுபவிச்சுப் பார்த்தா மட்மே அதன் முழுப் பரிமாணமும் புரியும். அந்த வெதுப்பகத்தில இந்தியப் பெண்கள், இலங்கைப் பெண்கள்(அக்காமார், தங்கச்சிமார்) அம்மாக்கள் எனப் பலரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். இந்த வெதுப்பகத்தில் மதிய உணவிற்காக எல்லோரையும் ஒரே நேரத்தில் போக விடமாட்டார்கள். இப்படியான சமயத்தில் நானும் நண்பரும் ஒருசேர போகவேண்டி வந்துவிட்டது. நண்பர் கொண்டு வரும் சாப்பாட்டில் தான் நான் பங்குபோடுவது வழமை. எனக்குச் சமைக்க சரியான சோம்பல். அதற்காக நண்பர் சமைக்கிறார் என்று நினையாதேங்கோ, அவருடைய துணையோடு சேர்ந்துதான் சமைக்கிறவர். சாப்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இரண்டுபேரும் சாப்பிடத் தொடங்கிய போது எமக்கு அருகில் உள்ள இன்னொரு மேசையில் சாப்பிடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஒரு தமிழ் அம்மாவோட பேச்சைக் கொடுத்தேன். ""எப்படி அம்மா? சாப்பிட வந்திருக்கிறீங்களா?""சாப்பிட மட்டும் வாய் திறக்க இருந்த அந்த அம்மாளு சாப்பிட்டாவோ இல்லையோ, நாங்கள் சாப்பிட்டு முடித்து எழும்ப மட்டும் தன்னுடைய வாயை மூடினமாதிரித் தெரியவில்லை.'என்னடா ராசாக்கள் இரண்டு பேரும் ஒரு பாசலில சாப்பிடுகிறீங்க? உங்களுக்கு இது காணாது பிள்ளையள், உங்கட வயசிற்கு எப்படிச் சாப்பிடவேண்டும் கண்டியலே" இந்தாங்கோ எனக்கு கூடிப்போச்சு. என்று சொல்லி மனுசி தன்னிடம் இருந்த கத்திரிக்காய்க் குழம்பில அரைவாசியையும், தேங்காய்ப் ப+ கலக்காத அரிசிமாப் பிட்டுவையும் எங்களுக்கு பரிமாறினா.எங்களுக்கு அவவிட்ட இருந்து சாப்பாட்டை வேண்டிச் சாப்பிட கஷ்;டமாக இருந்தது. ஏனென்றால் இந்த வயசில விடியற்காலையில எழும்பி சமைத்து நியாயமான தூரத்தில இருந்து வேலைக்கு வாறா, அவவிட்ட சாப்பாட்டைப் பங்கு போடுவதற்கு மனசு கேக்கவில்லை. மனுசி விட்டுதா எங்களை 'என்னடா தம்பிமாரே பார்த்துக்கொண்டு இருக்கிறீயள் சாப்பிடுங்கோ.. சாப்பிடுங்கோ என்று அடம்பிடிக்க நாங்களும் சாப்பிடத்தொடங்கினம். கொஞ்ச நேரம் கழிந்த பின்னர் "எப்படி இருக்கு என்னுடைய கத்தரிக்காக் குழம்பு? என்று வினவத்தொடங்கினா. நானும் மனுசி சந்தோஷப்படவேண்டும் என்பதற்காக நல்லா இருக்கம்மா, எப்படிச் சமைத்தனீங்க? என்று அவவின்ர தலையில ஐஸ் வைத்தபோது எனக்குப்பக்கத்தில இருந்தவன் தன்னுடைய சப்பாத்துக் காலால எனது கால் விரலை இறுக்கி மிதிக்கத் தொடங்கினான். அம்மா தொடங்கினா, ""ராசாக்கள் சாப்பிடும்போதே நான் நினைச்சனான் நல்ல ருசியா அனுபவிச்சுச் சாப்பிடுதுகள் யாரு பெத்த பிள்ளைகளோ இவ்வளவு ஆசையோட என்ர கறியச் சாப்பிடுதுகள் என்று."" ""முதலில கத்தரிக்காயை கீலம் கீலமா வெட்டிப்போட்டு நல்லா எண்ணையில பொரிக்க வேண்டும். பிறகு அந்த எண்ணைய புறப்பாக வடித்துப்போட்டு கறியைக் கூட்டி ஒரு அளவான சூட்டில சமைக்க வேண்டும். ஒரு நாளும் தம்பி தேங்காய்ப் பால் விடவே கூடாது. ஏனென்று இப்ப சொல்லுறன்.""'தேங்காய்ப்பால் விட்டால் கறி கெதியாகப் பழுதடைந்து போய்விடும்.' ""ஏன் அம்மா காலையில சமைத்து இப்ப சாப்பிடுவற்கிடையில தேங்காய்ப்பால் அவ்வளவு மோசமானதே? ......... அந்த அம்மா சிரிச்சுப்போட்டுச் சொன்னா ஒரு பதில்.............!!!!!!!!!இந்தக் கறி மூன்று கிழமைகளுக்கு முதல் சமைத்தது இப்ப மட்டும் எப்படி இருக்கு பார்த்தியலே...!!!நண்பருக்கு சாப்பிட்ட சாப்பாடு முழுவதும் தொண்டைக்கு மேலே வந்து நிற்பது போன்ற பிரமையோடு என்னை முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கும் அவன் மனுசிக்கு முன்னால் வாந்தி எடுத்திடுவானோ என்ற சந்தேகம்... நாள்பட நாள்பட சுவைதானம்மா..........என்று பாடவேணும் போல இருந்தது.